விஜய்யை அட்டாக் செய்தாரா தனுஷ்! சர்ச்சையை கிளப்பிய பேச்சு!

'திருச்சிற்றம்பலம்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பெற்றோர்களை பற்றி பேசியது நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 9, 2022, 01:27 PM IST
  • திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
  • படம் இந்த மாதம் 18ம் தேதி வெளியாக உள்ளது.
  • தற்போது தனுஷ் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யை அட்டாக் செய்தாரா தனுஷ்! சர்ச்சையை கிளப்பிய பேச்சு! title=

நடிகர் விஜய் மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ள நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும், அவருக்கு அடித்தளமாக இருந்தது அவரது தந்தை சந்திரசேகர்.  சமீபகாலமாக விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இடையே  சில மனக்கசப்பு ஏற்பட்டதாக, முன்பு போல் இருவருக்குள்ளும் பரஸ்பரம் இல்லையேயென்றும் செய்திகள் வெளிவந்தது, அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் சில சம்பவங்களும் நடந்தேறியது.  சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் 80வது பிறந்த நாள் விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை, பின்னர் எஸ்.ஏ.சி தன் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.  இதை பார்த்த பலரும் இன்னும் தந்தைக்கும், மகனுக்குமான மனக்கசப்பு தீரவில்லை என்று பேசிக்கொண்டனர்.

அடுத்ததாக விஜய்யின் தந்தையும், அவரது தாயும் மட்டும் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று அங்கு சதாபிஷேகம் செய்துகொண்டனர்.  பெற்ற பிள்ளைகள் இருந்து கோலாகலமாக நடத்திவைக்க வேண்டிய சதாபிஷேகம் இப்படி யாருமில்லாமல் நடக்கிறது, படத்தில் மட்டும் தான் விஜய் பெரியவர்களை மதிப்பது போல நடிக்கிறார், நிஜத்தில் அவரது பெற்றோர்களை அவர் மதிக்கவில்லை என விஜய் ஹேட்டர்ஸ் வசைபாடினர்.  தொடர்ந்து எழுந்த விமர்சனங்களையடுத்து எஸ்.ஏ.சி, தனது மகன் ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங் பிசியாக இருப்பதால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்று கூறியிருந்தார்.  இந்த செய்தி கொஞ்ச நாள் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | இத்தனை ஆண்டுகளில் கமல்ஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் நவரச நாயகன்?

மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.  அந்த விழாவில் பேசியவர், 'நாம குழந்தையை இருக்கும்போது நம்மல வளக்குற அம்மா, அப்பா அவங்களுக்கு வயசான பிறகு அவங்க குழந்தையா மாறிடுறாங்க.  அவங்கள நாம் குழந்தையா நல்லபடியா நினைச்சு பாத்துக்கிட்டா அது தான் மாஸ்' என்று பேசியுள்ளார்.  இதுவரை இப்படி பேசாதவர் திடீரென்று பேசியது ஒருவேளை நடிகர் விஜய் அவரது தந்தையின் விழாவில் கலந்துகொள்ளாமல் இருந்ததை தான் மறைமுகமாக சாடுகிறாரா என்று இணையாவசிகள் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மேலும் படிக்க | விருமன் மதுர வீரன் பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியா? கிளம்பும் புதிய சர்ச்சை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News