தாராவின் சதி, முதலிரவை நிறுத்திய சூர்யா! மாரி எடுக்கும் முடிவு என்ன? சீரியல் அப்டேட்

Maari Zee Tamil mega serial update:  மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்... தாரா செய்த சதி, முதலிரவை நிறுத்திய சூர்யா.. மாரி எடுக்கும் முடிவு என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 28, 2023, 12:27 PM IST
  • ஹஸ்பண்ட் சார் சொன்னா சரி தான்
  • மாரி எபிசோட் லேட்டஸ்ட் அப்டேட்
தாராவின் சதி, முதலிரவை நிறுத்திய சூர்யா! மாரி எடுக்கும் முடிவு என்ன? சீரியல் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாராவுக்கு ஷாக் அடித்து கீழே விழ இந்த விஷயம் அறிந்த சூர்யா கீழே இறங்கி வந்து விடுகிறான். அடுத்ததாக தாராவை பரிசோதனை செய்யும் டாக்டர் வீக்கா இருக்காங்க, அதனால் ரெஸ்ட் எடுத்ததால் போதும் என சொல்லி அவரும் கிளம்ப எல்லாரும் சூர்யா நீ எதுக்கு இங்க வந்த? உனக்கு யார் இதை சொன்னது என்று கேட்க சங்கரபாண்டி தான் சொன்னதாக சொல்ல எல்லாரும் அவனை திட்டுகின்றனர்.

மேலும் சூர்யா இல்லை நானா தான் இறங்கி வந்தேன் என்று சொல்ல எல்லாரும் சரி ரூமுக்கு போ என்று சொல்ல தாராவும் இவன் எப்படியும் போக மாட்டான் என்று நினைத்து நீ போ சூர்யா என்று சொல்ல அவன் என்னால முடியாது, நான் அம்மாவை பாத்துக்கறேன் என்று சொல்ல ஹாசினி அதான் போக சொன்னாங்கல போங்க என்று அனுப்பி வைக்கிறாள். 

எல்லாரும் வெளியே போனதும் தாரா மாரியை கூப்பிட்டு என்கிட்டயே சவால் விடுறியா என்று கோபப்பட அவள் உங்களுக்கு வெக்கமா இல்லையா? அவர் உங்கள அம்மாவா தான் பார்க்கிறார், ஆனால் நீங்க அவரை அழிக்க துடிக்கறீங்க என்று பதிலடி கொடுக்க தாரா நீ என்ன பண்ணாலும் அடுத்த தேவி நான் தான், உன்னை ஓட ஓட விரட்டுறேன் என்று சொல்ல மாரி உங்களால் முடிந்ததை பண்ணுங்க நான் இங்க தான் இருப்பேன் என்று சவால் விட்டு அங்கிருந்து நகர்கிறாள். 

ரூமுக்கு சென்றதும் சூர்யா மாரியிடம் நீ என்மேல வருத்தமா இருப்பேன்னு எனக்கு தெரியும், ஆனால் இந்த சூழ்நிலையில் என்னால எதுவும் பண்ண முடியாது என்று மன்னிப்பு கேட்க மாரி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ஹஸ்பண்ட் சார் என்று கீழே படுத்து கொள்கிறாள். மறுநாள் மாரி தேவி போட்டோ முன்பு நின்று இவங்க பண்றது ரொம்ப தப்பா இருக்கு, இவங்கள விட மாட்டேன், எனக்கு எதிர்க்கிற சக்தியை கொடு என்று வேண்டுகிறாள். 

மறுபக்கம் தாரா நம்மை பார்த்தாலே பயப்படுற மாரி என்கிட்டயே சவால் விடுறா, இவளை சும்மா விட கூடாது, பெருசா ஏதாவது செய்யணும் என யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News