வெற்றியை வீழ்த்த சதி..அடுத்தது என்ன?அதிரடி திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

Written by - Yuvashree | Last Updated : May 26, 2023, 11:56 AM IST
  • மெஸ்ஸை இடிக்க வருகிறாள் புஷ்பா.
  • அவளுக்கு ட்விஸ்ட் வைக்கிறான் வெற்றி.
  • வெற்றி காவல் நிலையம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
வெற்றியை வீழ்த்த சதி..அடுத்தது என்ன?அதிரடி திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்கும் நாடகம், மீனாட்சி பொண்ணுங்க. மக்களின் மனங்களில் நல்ல இடத்தை இந்த தொடர் தக்கவைத்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் ஃபேவரட்டான இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்கள் என்னென்ன தெரியுமா? 

முந்தைய எபிசாேட்:

புஷ்பா ஷக்தியிடம், “வெற்றியை வைத்து என் வீட்டை இடிக்க சொன்னாயா உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சவால் விடுகிறாள். பிறகு நீதிமணியிடம் “உன் மகள்களை நான் என்ன செய்கிறேன் என்று பார் என்னை விட்டுவிடு என்று நீயே என் காலில் விழுந்து கெஞ்ச போகிறாய்” என்றும் கோபமாக அவளிடமும் சவால் விடுகிறாள். அடுத்து, புஷ்பா மீனாட்சி வீட்டின் முன் மீண்டும் வந்து “மீனாட்சி நான்கு நாளில் இங்கு வந்தாக வேண்டும் இல்லை என்றால் இந்த வீடு தப்பிக்காது” என்று மீண்டும் மிரட்டுகிறாள். 

Meenakshi Ponnunga

அப்போது வெற்றி அங்கே வர மீண்டும் என்ன பிரச்சனை செய்ய வந்தாயா என்று புஷ்பா கேட்க, வெற்றி “இல்லை இல்லை என்று சொல்லிவிட்டு அன்று ஏதோ மூடில் செய்து விட்டேன்'' நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, சக்தி வெற்றியைப் பார்த்து கோபப்படுகிறாள். அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் தெரிந்து கொள்வோமா?

மேலும் படிக்க | Prakash Raj: ‘ஹாய் செல்லம்’ வில்லத்தனத்திலும் ஹீரோயிசம் காட்டிய பிரகாஷ் ராஜ்ஜிற்கு பிறந்தநாள் இன்று..!

இன்றைய எபிசோட்:

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி சக்தியை தன் காலில் விழச் சொல்கிறான். யமுனா துர்காவும் சக்தியிடம் வெற்றியிடம் மன்னிப்பு கேள் என்று சொல்கிறார்கள்.

சக்தி வெற்றியிடம் எனக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்கிறாள். இரவில் சாந்தா மீனாட்சிக்கு போன் செய்ய மீனாட்சி போனில் பேசுகிறாள். அப்போது கூடிய விரைவில் வருகிறேன் என்று பேசும்பொழுது ஒரு பெட்ரோல் பாம் போன் பூத்தின் மேல் விழ போன் பூத் பற்றி எரிகிறது.

காவல் நிலையம் சொல்லும் புஷ்பா..

இதனையடுத்து துர்காவும் யமுனாவும் சக்தியும் மீனாட்சி திரும்பி வரவேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது தீபம் அணைந்து விட அபசகுனமாக தெரிய அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.

Meenakshi Ponnunga

புஷ்பாவும் சங்கிலியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர ஏற்கனவே வெற்றியால் அவமானப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் மாற்றல் ஆகி அந்த ஸ்டேஷனுக்கு வர புஷ்பா இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசி வெற்றியை எப்படியாவது கைது செய்யுங்கள் என்று லஞ்சம் கொடுக்கிறாள்.

காணத்தவறாதீர்கள்..

மீனாட்சி மெஸ்ஸிற்கு திரும்பினாளா? புஷ்பாவின் சதி திட்டம் பலித்ததா? வெற்றி அந்த சதியில் இருந்து தப்பித்தானா? இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த எபிசோடில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Aditi Rao Hydari: மஞ்சள் மேகமாக மனதை மயக்கும் அழகு நாயகி அதிதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News