கோபிநாத் vs கரு பழனியப்பன் vs ஆவுடையப்பன்.. ஆவலை அதிகப்படுத்தும் விவாத நிகழ்ச்சிகள்.!!

தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி, நீயா நானா விவாத நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் வகையில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.  

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2023, 12:54 PM IST
  • மூன்று சேனல்களில் மூன்று விவாத நிகழ்ச்சிகள்.
  • மக்களுக்கு காத்திருக்கும் விவாத விருந்து.
  • ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ஒளிபரப்பாகிறது.
கோபிநாத் vs கரு பழனியப்பன் vs ஆவுடையப்பன்.. ஆவலை அதிகப்படுத்தும் விவாத நிகழ்ச்சிகள்.!! title=

தமிழ் சின்னத்திரையில் விவாத நிகழ்ச்சிகளுக்கென எப்போதும் தனி வரவேற்பு உண்டு. நடிகரும் இயக்குனருமான விசு தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் தொடங்கி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சி வரை நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது, நீயா நானா விவாத நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் வகையில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு பழனியப்பன் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

மேலும் படிக்க | Maaveeran First Review: மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி! என்ன சொன்னார் தெரியுமா?

 

மேலும் தற்போது இவர் வேறொரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார், இப்படியான நிலையில் எதார்த்தமான கேள்விகள் மூலமாக பல திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து மக்களை கவர்ந்த ஆவுடையப்பன் வரும் ஜூலை 16 முதல் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சாமானிய மக்களில் ஒருவராக காமன் மேனாக இந்த இடத்திற்கு வந்துள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

neeya

நீயா நானா நிகழ்ச்சியை மிகவும் எதார்த்தமான உரையாடல்களுடன் கொண்டு சென்று வருகிறார் கோபிநாத், அதே போல் கரு பழனியப்பன் அவருக்கான பாணியில் இலக்கிய நயத்துடன் நிகழ்ச்சியை கொண்டு சென்று வருபவர், இப்படியான நிலையில் ஆவுடையப்பன் அவர்களும் எதார்த்தமான நடையில் எப்பேர்ப்பட்ட கேள்விகளுக்கும் எளிதாக பதிலை வர வைக்க கூடிய திறமை கொண்டவர். இதனால் இவரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்று மாறுபட்ட சேனல்களில் மூன்று விவாத நிகழ்ச்சிகள். அதில் தமிழா தமிழா மற்றும் வா தமிழா வா நிகழ்ச்சிகள் மதியம் 12 மணிக்கும் நீயா நானா நிகழ்ச்சி 12.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியின் முதல் எபிசோட் வரும் ஜூலை 16-ம் தேதி ஒளிபரப்பாக இருப்பதால் கோபிநாத், கரு பழனியப்பன் வரிசையில் இடம் பிடிப்பாரா என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆக மொத்தத்தில் இனி வரும் ஒவ்வொரு ஞாயிறும் மதிய வேளை மக்களுக்கு விவாத விருந்து தான்.

மேலும் படிக்க | போர் தொழில் பிரமாண்ட வெற்றி! சரத்குமார் நடித்துள்ள வேறு சில போலீஸ் படங்கள்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News