ரன்வீர் சிங் போட்ட வழியில் இப்போது விஷ்ணு விஷால் - வைரலாகும் போஸ்

ரன்வீர் சிங்கைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 24, 2022, 03:33 PM IST
  • ரன்வீர் சிங் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்திருந்தார்
  • பேப்பர் என்ற பத்திரிகையின் அட்டைப்படத்துக்காக அவர் போஸ் கொடுத்திருந்தார்
  • அவரைப் போலவே இப்போது விஷ்ணு விஷாலும் உடையின்றி போஸ் கொடுத்துள்ளார்
ரன்வீர் சிங் போட்ட வழியில் இப்போது விஷ்ணு விஷால் - வைரலாகும் போஸ் title=

பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரது ஆடை குறித்த பேச்சு எப்போது எழும். வித்தியாசமாக, விதவிதமான நிறங்களில் அவர் அணிந்துவரும் உடைகளுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம் அவர் அணியும் ஆடைகள் சமயத்தில் கிண்டல்களையும் சந்திப்பதுண்டு. ஆனால் ரன்வீர் தனக்கு தோன்றியபடி உடைகள் உடுத்துவதை நிறுத்தவில்லை.

Ranveer Singh

சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்தார் ரன்வீர் சிங். இதுவரை உடைகளால் கிண்டல் செய்யப்பட்ட ரன்வீர் தற்போது உடை இல்லாமல் இருந்ததால் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இருப்பினும் அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடி ரன்வீருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில் ரன்வீர் சிங்கைப் போலவே நடிகர் விஷ்ணு விஷால் உடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், “ட்ரெண்டில் இணைந்துகொள்வோம். பின்குறிப்பு இந்தப் புகைப்படத்தை எடுத்தது எனது மனைவி ஜுவாலா” கட்டா என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்களும் வைரலாகிவருகின்றன.

 

முன்னதாக ரன்வீர் சிங் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்த மேற்குவங்க நடிகையும், எம்பியுமான மிமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவே அவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் எந்த மாதிரியான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும். 

 

இந்த புகைப்படங்கள் பாராட்டும் ஒன்றாக இருக்குமா. பெண் இப்படி போஸ் கொடுத்திருந்தால் அந்தப் பெண்ணின் வீட்டை எரிக்க வேண்டும், போராட்டங்களை நடத்த வேண்டும் என கூறி இருப்பார்கள் .அதே போல் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுப்பது அவளை அவமானப்படுத்துவது போன்ற செயல்களை செய்திருப்பார்கள்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தேசிய விருதுப் பெற்ற நஞ்சியம்மாவின் ‘குரல்’ சொல்லும் கதை.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News