ஜிப்ரான் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் கொரோனா விழிப்புணர்வு பாடல்...

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியத் திரையுலகில் படங்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், பல கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் தற்போது செய்திதாள்களை நிறைத்துள்ளன.

Last Updated : Apr 22, 2020, 09:46 AM IST
ஜிப்ரான் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் கொரோனா விழிப்புணர்வு பாடல்... title=

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியத் திரையுலகில் படங்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், பல கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் தற்போது செய்திதாள்களை நிறைத்துள்ளன.

கொரோனா முழு அடைப்பு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகர், நடிகைகள் மற்றும் திரை துறை பிரபலங்கள் வீடியோக்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் அனைவரையும் வீட்டில் தங்குமாறு கேட்டு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும்., இசையமேப்பாளர் ஜிப்ரானுடன் இணைந்து கமல்ஹாசன் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் மனிதநேயம் குறித்த பாடல் வெளியிட இருப்பதாகவும் தகவல்க்ள தெரிவிக்கின்றன. இந்த பாடலுக்காக தொழில்துறையைச் சேர்ந்த 49 முக்கிய பாடகர்களை இவர்கள் இருவரும் அழைத்து வந்துள்ளனர். இந்த பாடலுக்கு நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர்களான அனிருத், யுவன் சங்கர் ராஜா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர்களான பம்பாய் ஜெயஸ்ரீ, சித் ஸ்ரீராம் மற்றும் ஷங்கர் மகாதேவன், நடிகர் சித்தார்த், பிக் பாஸ் புகழ் முகின் ராவ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இந்த பாடலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோரஸைப் பொறுத்தவரை பொதுமக்களை இணைக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் முன்னதாக ஒரு வீட்டு ஸ்டுடியோவைக் கொண்ட பாடகர்களை அழைக்கும் ட்வீட்டர் பதிவை வெளியிட்டார். இதற்கு ஆன்லைனில் பெற்ற பதில்களுடன், அவர் 37 பாடகர்களுடன் இந்த பாடலில் அவர் எவ்வாறு தொலைதூரத்தில் பணியாற்றினார் என்பதை விளக்கும் வீடியோவையும் ஜிப்ரான் சமீபத்தில் ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த பாடல் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ரான் மற்றும் கமல்ஹாசன் இதற்கு முன்பு பாபனாசம், உத்தமா வில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். இதற்கிடையில், கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார், இது இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணைந்து வெளிவரும் ஒரு தொடர்ச்சி ஆகும்.

இப்படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் சித்தார்த் தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கத் தொடங்கும் சேனாபதியின் பேரனாக நடிக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News