மார்ச் மாதத்தில் படப்போகும் கஷ்டங்களுக்கு இப்போதே தயாராகிவிடுங்கள்! வருமுன் காப்பது நல்லது!

Bad Effects Of Rajayogs: 200 ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களின் நிலை ஒரே மாதிரி வருகிறது. இது சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் உருவாக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2024, 12:43 AM IST
  • ராஜயோகங்களால் படாத பாடு படப்போகும் ராசிகள்
  • மார்ச் மாத ராசி மாற்ற எச்சரிக்கை
மார்ச் மாதத்தில் படப்போகும் கஷ்டங்களுக்கு இப்போதே தயாராகிவிடுங்கள்! வருமுன் காப்பது நல்லது! title=

200 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் உருவாகும் கிரக நிலைகள் பலருக்கு இதுவரை இல்லாத மாற்றங்களைத் தரும். அதிலும் ஒன்றல்ல, மூன்று முக்கிய கிரகங்களின் மாறுதல், சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால், பலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.. பொதுவாகவே, கிரகங்களின் நிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நிலைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக வரும்.

கிரக மாற்றங்கள்

கிரகங்களின் நிலை ஓரளவு ஒத்ததாக வருவதுபோல, அடுத்த மாதமான மார்ச் மாதத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். அதனால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். இதற்குக் காரணம், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாறும் காலம் வேறுபட்டது. ஒரு குறிப்பிட்ட ராசியில் உள்ள கிரகங்களின் இணைப்பு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்வதால் சுப மற்றும் அசுப யோகங்கள் ஏற்படுகின்றன.

கிரக மாற்றங்கள்

மனித வாழ்வையும் பூமியையும் பாதிக்கும் இந்த கிரக நிலைகள் உலகில் அனைத்து விசயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் ஷஷ மகாபுருஷ ராஜயோகத்தையும், மகர ராசியில் செவ்வாய் நுழைவது ருச்சக ராஜயோகத்தையும், மீனத்தில் சுக்கிரன் நுழைவது மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கும். இந்த யோகங்கள் சிலருக்கு ஆக்கப்பூர்வமாக இருந்தால், சிலருக்கு தோஷமாக மாறி தொல்லைக் கொடுக்கும்.

சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கிரகங்களின் நிலை ஒரே மாதிரி வருகிறது. இது சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் உருவாக்கும்.

மேலும் படிக்க | மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பண வரவு

சிம்மம்
வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இல்லாவிட்டால், இருக்கும் நிம்மதியும் பறிபோய்விடும். சில முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிரிகள் விலகி செல்வார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும் என்றாலும், அதுவும் பிரச்சனைகளை உருவாக்கலாம். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை வலுவடையும்.ஆனால், செலவுகளும் இரு மடங்காக உயரும்.

கன்னி

நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும் என்றாலும், ஏன் செய்தோம் என்ற மனோநிலையை ஏற்படுத்தும் அளவுக்கு விமர்சனங்கள் வருத்தத்தைக் கொடுக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். மூதாதையர் சொத்துக்களால் பிரச்சனை உண்டாகலாம். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும்.  

துலாம்

கடன் விஷயங்களில் நிதானமாக செயல்படவேண்டும். தாயுடன் சிறுவிவாதங்கள் ஏற்படும். வேலை சார்ந்த எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொள்ளவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் பலனைத் தரும்.  கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News