புதன் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு சூப்பர், சிலருக்கு சுமார், ராசிபலன் இதோ

Mercury Transit: தனுசு ராசியில் புதன் நுழைவது மக்களின் வாழ்வில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2022, 10:35 AM IST
  • கடகம், விருச்சிகம், கன்னி, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் புதனின் ஸ்தான மாற்றத்தால் பலன் அடையப் போகிறார்கள்.
  • இந்த நேரத்தில், இந்த நபர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேறுவதற்கான முழு வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
  • நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும்.
புதன் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு சூப்பர், சிலருக்கு சுமார், ராசிபலன் இதோ title=

புதன் பெயரச்சி 2022: ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். டிசம்பர் மாத தொடக்கத்தில் புதன் கிரகம் தனுசு ராசியில் நுழைந்தது. புதன் டிசம்பர் 27ம் தேதி வரை இந்த ராசியில் இருக்கும். டிசம்பர் 16 அன்று, அதாவது இன்று, இந்த ராசியில் சூரியனின் பிரவேசமும் நடக்கிறது. இதன் காரணமாக இந்த ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி புதன் வியாழனின் ராசிக்குள் நுழைந்ததால் சுப பலன்களின் பாதிப்புகள் குறைந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல ராசிக்காரர்களுக்கு இக்காலம் கலவையான பலன்களை அளிக்கும். தனுசு ராசியில் புதன் நுழைவது மக்களின் வாழ்வில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் சந்திக்க நேரிடும். கடகம், விருச்சிகம், கன்னி, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். மறுபுறம், துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதாரணமாக இருக்கப் போகிறது.

இந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்

புதனின் சஞ்சாரம் பத்திரிகை, கல்வி, எழுத்து மற்றும் வக்கீல் போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்களின் பகுத்தறியும் சக்தியை அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த துறைகளுடன் தொடர்புடைய மக்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் காணப்படும். அதே சமயம், சிலரது வேலை செய்யும் விதத்திலும் மாற்றங்கள் காணப்படும். வியாழன் ராசியில் அமர்வதால் புத்திசாலித்தனமும் அறிவும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | மார்கழி 2022: பிறந்தது மார்கழி மாதம், கோவில்களில் சிறப்பு வழிபாடு 

இவர்களுக்கு நல்ல நேரம்

குறிப்பாக கடகம், விருச்சிகம், கன்னி, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் புதனின் ஸ்தான மாற்றத்தால் பலன் அடையப் போகிறார்கள். இந்த நேரத்தில், இந்த நபர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேறுவதற்கான முழு வாய்ப்புகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். நீங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமானது.

இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

இந்த காலகட்டத்தில் மகரம், துலாம், கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை பலவீனமடையலாம். புதன் சஞ்சாரத்தின் போது சேமிப்பில் நஷ்டம் மற்றும் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் வியாபாரத்திலும் கவனமாக இருக்கவும். இந்த காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்காது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வரும் சில ‘ஆபத்தான’ செயல்களை தவிர்க்கலாமே! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News