Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும், எச்சரிக்கை தேவை

Monthly Horoscope July 2022: ஜூலையில் இந்த ராசிகள் பிரச்சனைகளை எதிர்கொள்ளவுள்ளனர். கிரக நிலை மாற்றங்களால் என்னென்ன ஆபத்துகள் நேரிடும்? இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 06:09 PM IST
  • கடக ராசியில் பிறந்தவர்கள் தற்போதைக்கு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள்.
  • ஜூலை மாதம் மேஷ ராசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை இருக்கும்.
  • கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மாற்றம் காரணமாக கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஜூலை மாதம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும், எச்சரிக்கை தேவை title=

ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர். இந்த மாதம், புதன், சூரியன், சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கிரகங்கள் நிலை மாறவுள்ளன. ஜூலையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

ஜூலை மாதம் மேஷ ராசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை இருக்கும். இந்த சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மற்றும் கெட்ட பலன்கள் கிடைக்கக்கூடும். கிரகங்களின் நிலை மாற்றத்தால் இந்த மாதம் பண இழப்பு ஏற்படலாம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்கள் தற்போதைக்கு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள். சனியின் நிலை மாற்றத்தால் ஜூலை 12 முதல் உங்கள் பிரச்சனை குறையலாம். இருப்பினும், ஜூலை முழுவதும் நிதி விஷயங்களில் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

மேலும் படிக்க | ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழையாய் பொழியும்: உங்க ராசி என்ன 

கன்னி:

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மாற்றம் காரணமாக கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஜூலை மாதம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நிதி சம்பந்தமான கவலைகள் இருக்கும். இருப்பினும், மாத இறுதியில், வருமானத்தின் புதிய வழிகள் பிறக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் தாக்கம் முழு வீச்சில் இருக்கிறது. சனியின் தாக்கம் இருப்பதால் இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மகர ராசிக்காரர்கள் குறிப்பாக பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக பேசிப் பழகுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ரிஷபம், சிம்மம் உட்பட 4 ராசிகளுக்கு ராஜ யோகம்: புதன், சுக்கிரன் சேர்க்கையால் ஜாக்பாட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News