பகை வீட்டுக்கு செல்லும் செவ்வாய்; சுப பலன்களை பெறப்போகும் ராசிகள்

அக்டோபர் 16 ஆம் தேதிக்குப் பிறகு பகை வீட்டுக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைய இருக்கும் நிலையில் அதனால் சுப பலன்கள் சிலருக்கு கிடைக்கப்போகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 17, 2022, 10:09 AM IST
  • இன்னும் இரண்டு நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி
  • ராஜயோகம் கிடைக்கப்போகும் ராசிகள்
  • இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை
பகை வீட்டுக்கு செல்லும் செவ்வாய்; சுப பலன்களை பெறப்போகும் ராசிகள் title=

செவ்வாய் ரிஷப ராசியிலிருந்து தன் பகை வீடான மிதுன ராசிக்கு அக்டோபர் 16 ஆம் தேதி  பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 30 ஆம் தேதி வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் அவர், பின்னர் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதனால் ஏற்படப்போகும் சுப மற்றும் அசுப பலன்களை தெரிந்து கொள்வோம். 

செவ்வாய் பொதுபலன்

செவ்வாய் பொதுவாக எதிரி வீட்டில் அமர்ந்தால் உலகுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். இயற்கை சீற்றம், பெரு வெள்ளம் உருவாகும். அதேநேரத்தில் சில ராசிகளுக்கு மங்கள யோகமும் உண்டு. அதாவது நல்ல பலன்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு கிட்டும். காதல் கைகூடும், உறவுகளில் மன மகிழ்ச்சி ஏற்பட்டு ஒன்று சேருவார்கள். அவரவர் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் அமைப்பை பொறுத்து இதன் பலன்கள் மாறுபடும்.  

மேஷம்

மேஷ ராசியின் தைரிய ஸ்தானம் என கூறப்படும் 3ம் வீட்டில் ராசி அதிபதி செவ்வாய் பெயர்ச்சி அடைவதால் ஆற்றலும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துறை ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் பணியை மூத்த அதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இருப்பினும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதோடு, வார்த்தைகளை கவனித்து பயன்படுத்தவும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மை கிட்டும். 

​சிம்மம் 

சிம்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் செவ்வாய் அமர இருக்கிறது. இது வியாபாரிகளுக்கு சிறப்பானதாக இருக்கும். தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கலாம். கடந்த காலத்தில் செய்த முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவால் நீங்கள் ஆதாயமடைவீர்கள். பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கன்னி 

கன்னி ராசியில் கர்ம ஸ்தானத்தில் அமர்கிறார் செவ்வாய். தொழில் தொடர்பான கவலைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலையில்லாதவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம். புதிய தொழிலைத் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமானதாக காலம். கூட்டு தொழில் செய்வதில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

மகரம்

மகர ராசிக்கு நோய், எதிரி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். உங்களால் கடினமான வேலைகளை செய்து முடிக்க முடியும். எதிரிகளின் தொல்லை குறையும். உங்களின் போட்டித் திறன் அதிகரிப்பதைக் காணலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறலாம். நிலம் வாங்குவது, வீடு கட்டுவது தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் சாதக பலன் கிடைக்கும். 

​மீனம்

சில மீன ராசியினருக்கு சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும். சமூக மட்டத்தில் உங்களின் புகழ் உயரும், அதே நேரத்தில் சமூகத்தின் முக்கியஸ்தர்களுடன் பழக்கம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், தொழிலதிபர்களுக்கு பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிக்க முடியும். உங்கள் உடல்நிலையும் நன்றாக இருக்கும், ஆனால் தாயின் உடல்நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பும், காதலும் மிகுதியாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் துணையிடமிருந்து ஆச்சரியமான பரிசைப் பெறலாம்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News