ஐ.பி.எல் உரிமையாளர்களை நாளை சந்திக்கும் பிசிசிஐ..! எதுக்கு தெரியுமா?

ஐ.பி.எல் போட்டிகளுக்கான தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்ய அனைத்து ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும் நாளை பிசிசிஐ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:55 PM IST
ஐ.பி.எல் உரிமையாளர்களை நாளை சந்திக்கும் பிசிசிஐ..! எதுக்கு தெரியுமா? title=

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பாதிப்புக்கு இடையே நடந்து முடிந்ததால், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்யும் விதமாக அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் நடத்தலாம் என்றால், கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், இந்தியாவில் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.

ALSO READ | Tata in IPL: இனிமேல் Vivo IPL கிடையாது! பணக்கார பிரீமியர் லீக்கின் பெயர் மாறியது!

அப்படி நடத்தப்பட்டாலும், மும்பை உள்ளிட்ட ஒரு சில மைதானங்களில் மட்டுமே அனைத்து போட்டிகளையும் நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் வெளிநாடுகளில் நடத்தும் பிளான் பி திட்டமும் பிசிசிஐயிடம் உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தமுறை இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

ALSO READ | IPL 2022: கொரோனாவும் ஐபிஎல்லும்! பிசிசிஐயின் PLAN B

தென்னாப்பிரிக்கா என்றால் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு சிக்கல் எழும் என்பது மற்றொரு பிரச்சனையாக இருக்கிறது. அதனால், எங்கு போட்டியை நடத்தலாம்? எந்த தேதிகளில் நடத்தலாம்? என்பது குறித்து அனைத்து ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ நாளை கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அணி உரிமையாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கள சூழலையும் கருத்தில் கொண்டு பிசிசிஐ இறுதி முடிவை எடுக்க உள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகு ஐ.பி.எல் எங்கு நடைபெறும்? எந்த தேதியில் நடைபெறும்? என்ற விவரங்கள் ஓரளவுக்கு தெரிந்துவிடும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏலம் நடைபெறும் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News