ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்ட இந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!

RCB Latest News : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2024, 07:44 PM IST
  • ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்த முடிவு
  • மூன்று பிளேயர்கள் ரீட்டெயின் லிஸ்ட்
  • மேக்ஸ்வெல்,சிராஜ் இந்த லிஸ்டில் இல்லை
ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்ட இந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!  title=

Royal Challengers Bangalore News : ஐபிஎல் 2025 தொடருக்கான பணிகள் எல்லாம் பத்து அணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இம்முறை மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் ரீட்டெயின் செய்யப்போகும் மூன்று பிளேயர்களின் பட்டியலை தயார் செய்துவிட்டன. மற்ற பிளேயர்கள் எல்லாம் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லாத ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இம்முறை தங்களின் அணிகளை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கின்றன. அதனால், ஏற்கனவே அந்த அணியில் இருக்கும் ஸ்டார் பிளேயர்கள் எல்லாம் இம்முறை ஏலத்துக்கு வரப்போகிறார்கள். 

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?

ஆர்சிபி அணி எடுத்த முடிவு

டுப்ளெசிஸ், வில் ஜாக்ஸ், விராட் கோலி ஆகியோர் ஆர்சிபி அணியால் ரீட்டெயின் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதநேரத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், அவரின் சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இம்முறை செல்வார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆர்சிபி அணியிடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தாலும், அது உண்மையில்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்சிபி அணி விடுவிக்கும் பிளேயர்கள்

அதேநேரத்தில் முகமது சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோர் இம்முறை கண்டிப்பாக ஐபிஎல் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இவர்களை தக்க வைப்பதற்கான ஆப்சன் ஆர்பிசி அணியிடம் இல்லை என்பதால், மேக்ஸ்எல், முகமது சிராஜ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் இப்போதே கணக்கு போட தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி அணியும் மற்ற அணிகளில் இருந்து ஏலத்துக்கு வரும் ஸ்டார் பிளேயர்களின் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறது. அவர்கள் ஏலத்துக்கு வந்தால் எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறது. இப்போதைக்கு கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு வருவது கிட்டதட்ட உறுதியாகியிருக்கிறது. 

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதியை இறுதி செய்ய ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. இதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு ஐபிஎல் 2025 நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

மேலும் படிக்க | IND vs SL: இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்! வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News