இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது!

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்து சென்றனர்.

Last Updated : Jan 16, 2018, 09:38 AM IST
இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது! title=

பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், சிறை பிடித்து செல்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் குறைவான படகுகள் மீன்பிடிக்க சென்றனர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்ப முற்பட்டனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டியதாக கூறி இந்த படகுகளில் இருந்த 16 மீனவர்களையும் சிறை பிடித்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 159 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.

Trending News