7th pay commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள குட் நியூஸ்..!!

அரசு பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சட்டம்னற பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 7, 2021, 12:00 PM IST
7th pay commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள குட் நியூஸ்..!! title=

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து குறிப்பிடுகையில், அகவிலைப்படி உயர்வு 1-4.2022 முதல் அமல்படுத்தப்படும் என குறிப்பிடபட்டிருந்தது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு, அகல்விலைப்படி உயர்வை அறிவிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பட்ஜெட் அறிவிப்பு ஏமாற்றத்தை கொடுத்தது. 

இந்நிலையில், அரசு பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சட்டம்னற பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அரசு ஊழியர்களுக்கான சமபள உயர்வு மற்றும் பிறகு முக்கிய சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:

- தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்.

- அகவிலைப்படி மூன்று மாதம் முன்கூட்டியே வழங்கப்படுவதால், அரசுக்கு 1,620 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஊதியத்தில் இனி இந்த தொகையும் சேரும்

- இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

- அரசு பள்ளிகளில் காலையாக உள்ள இளநிலை உதவியாளரின் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

- அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படும் முறை தவிர்க்கப்படும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

- போராட்டங்களில்  அரசு ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

- பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் அரசு பணியாளர்களின் வாரிசு தாரர்கள் கருணை அடிப்படையில் அரசு பணி பெறுவதில் உள்ள நடைமுரை சிக்கலகள் நீக்கப்படும்.

- மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான 10 லட்சம் ரூபாயுடன், கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவு தொகைக்கு அரசு நிதி உதவியுன் கீழ் உதவி வழங்கப்படும்.

- அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி நியமன மேற்கொள்ளப்படும்.

ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News