ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளி

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2024, 02:45 PM IST
  • வேகமெடுக்கும் ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு
  • தலைமறைவாக இருந்த முக்கிய புள்ளி ரூசோ கைது
  • விரைவில் அடுத்தக்கட்ட நபர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு
ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி மீண்டும் கைது! சிக்கப்போகும் முக்கிய புள்ளி title=

சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆருத்ரா கோல்டு தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ 2,438 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் சொன்னது போல் பணத்தை தரவில்லை. அந்த நிறுவனத்தின் முதலீடு செய்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான ரூசோ உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க | திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!

இவ்வழக்கில் ரூசோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ரூசோ மோசடி செய்துள்ளார். அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு, அவர் ஜாமீனில் வெளியே இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என வாதிட்டார். இவ்வாதங்களை கேட்ட நீதிபதி  ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த ரூசோ  தலைமறைவாகிவிட்டார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் 

இந்நிலையில், ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இயக்குனரில் ஒருவரான ரூசோவை நீதிமன்ற உத்தரவுபடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இப்போது கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த நிதி மோசடி புகாரில் தொடர்புடைய இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பேச்சு அடிப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, அந்த நபர்களுக்கு எதிராக ஆதாரங்களையும் சேகரித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்னும் கைது செய்யப்பட்டாமல் இருக்கின்றனர். லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த வழக்கில் அந்த அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கோடை காலத்திலும் சளி பிடித்து மூக்கடைப்பா... குணப்படுத்த ஈஸி இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News