கோடநாடு விவகாரம் குறித்து EPS விளக்கமளிக்க வேண்டும்: கமல்..

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெறிவித்துள்ளார்!

Last Updated : Jan 15, 2019, 11:16 AM IST
கோடநாடு விவகாரம் குறித்து EPS விளக்கமளிக்க வேண்டும்: கமல்.. title=

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெறிவித்துள்ளார்!

கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்று, அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மேத்யூஸ் ஆவணப்பட வீடியோ நாடு முழுவதும் பெரும் புயலைக்கிளப்பி உள்ளது. மேலும் இச்சம்பவம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. எதிர்கட்சி உட்பட தமிழகத்தின் மற்ற கட்சிகள், இச்சம்பவம் குறித்து விசாரணை கூறிவருகின்றனர்.  

இந்நிலையில், இது குறித்து பலரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். கொடநாடு கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு தெறிவித்துள்ளார். அதோடு, இந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தான் முன்பிருந்தே கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Trending News