மருத்துவ சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பினார் விஜயகாந்த்....

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 9.45 மணியளவில் சென்னை வந்தடைந்தார்!

Last Updated : Feb 16, 2019, 10:03 AM IST
மருத்துவ சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பினார் விஜயகாந்த்.... title=

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 9.45 மணியளவில் சென்னை வந்தடைந்தார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த 2014 தொடக்கத்தில், சிங்கப்பூருக்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் 2014-ஆம் ஆண்உட ஜூலையில் மீண்டும் சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரிலும், சென்னையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை பெற்றார். 

இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா சென்றார். சுமார் இரண்டு மாதங்களாக அமெரிக்காவிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று, சிறுநீரக பிரச்சினைகளுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தனது சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் இன்று காலை விஜயகாந்த் சென்னை வந்தடைந்தார். இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் தமிழகம் திரும்பியுள்ள விஜயகாந்த் அவர்களை வரவேற்க தேமுதிக தொண்டர்கள் காலை 7.00 மணி முதலே சென்னை பன்னாட்டு விமான நிலையம் முன்னதாக குவிய தொடங்கினர்.

விஜயகாந்த் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் விதமாக சென்னை விமானநிலயை வழியெங்கிலும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News