‘ஒண்ணு சேருங்க இல்லை இங்க வராதிங்க’ - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளாத டெல்லி!

மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து கட்சி நிலவரங்கள் குறித்து பேச இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தொடர்ந்து முயற்சித்துவருகின்றனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 12, 2022, 06:30 PM IST
  • மோடி நேற்றும் அமித் ஷா இன்றும் தமிழக வந்தனர்
  • இருவரும் அதிமுக விவகாரம் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ்ஸிடம் பேசவில்லை
  • இதனால் கடும் அப்செட் என கூறப்படுகிறது
 ‘ஒண்ணு சேருங்க இல்லை இங்க வராதிங்க’ - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளாத டெல்லி! title=

ஜெயலலிதா மரணம், சசிகலாவின் சிறைவாசம், ஓபிஎஸ் தர்மயுத்தம், இபிஎஸ், ஓபிஎஸ் இணைவு - பிரிவு என கடந்த ஆறு வருடங்களாக அதிமுகவில் தொடர்ந்து களேபரங்கள் நடந்துவருகின்றன. இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்த பிறகு ஒருவழியாக கட்சியின் உட்கட்சி போர் முடிவுக்கு வருமென்று ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்திருக்க அதுவும் கானல் நீராகி போனது. சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொள்ள நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் தரப்புக்கு அங்கும் அடி விழுந்தது. இருப்பினும் மனம் தளராத ஓபிஎஸ் அதிமுகவை கைப்பற்றியே தீர்வது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

ஆனால் இபிஎஸ்ஸோ விடாப்பிடியாக அத்தனை வழிகளிலும் ஓபிஎஸ்ஸுக்கு பேரிகார்டு போட்டுவருகிறார். இப்படி ஆளுக்கொரு பாதையில் பயணித்துக்கொண்டிருக்க ரத்தத்தின் ரத்தங்களோ எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க மக்களவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது பாஜக. 

சட்டப்பேரவைத் தேர்தலில் சில இடங்களை கைப்பற்றியதுபோல் மக்களவைத் தேர்தலிலும் இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் முனைப்புடன் இருப்பதால் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் சசிகலா, தினகரனையும் அதிமுகவுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

EPS, OPS, Modi

எனவே பாஜகவின் டெல்லி மேலிடம் அதிமுக பிரச்னையை சுமூகமாக்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தமிழ்நாடு வந்த மோடியை சந்திக்க இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இருவரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அரசியல் குறித்து பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. 

நேற்றைய சந்திப்பு கானல் நீராகிப்போன சூழலில் இன்று சென்னையில் அமித் ஷா கலந்துகொண்ட தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை பார்த்த அமித் ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் தன்னை தனிப்பட்ட முறையில் அமித் ஷா சந்திப்பார் என நினைத்திருந்தவேளையில் அமித்ஷாவோ பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் ஓபிஎஸ் கடும் அப்செட் என கூறப்படுகிறது.

Amit Shah

டெல்லி மேலிடத்திடம் கட்சி நிலவரம் குறித்து இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் பேச முயற்சித்துவரும் வேளையில் அவர்களிடம் அதிமுக விவகாரம் குறித்து மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பேசாததற்கு ஒரே காரணம்; இருவரும் ஒன்றாக இருந்தால்தான் தேர்தலில் லாபத்தை அறுவடை செய்ய முடியும் என பாஜக நினைக்கிறது. இருவரில் ஒருவர் தனியாக போனாலும் அது வீண் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக நம்புகிறது. எனவே இருவரும் ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லையென்றால் வராதீர்கள் என்பதைத்தான் இருவரும் சூசகமாக நேற்றும், இன்றும் உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் படிக்க | நூற்றாண்டு கால சமுக நீதிக்கு பேராபத்து - அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க. ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News