பாலத்தை அடித்து சென்ற வெள்ளம்!

Last Updated : Aug 10, 2017, 10:27 AM IST
பாலத்தை அடித்து சென்ற வெள்ளம்! title=

வெள்ளத்தில் மக்கள் அடித்து சென்றுள்ள கதையை நாம் கேள்விபட்டிருகின்றோம், அனால் தற்போது பாலமே அடித்து சென்றுள்ள நிகழ்வு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக செந்துறை அருகேயுள்ள நின்னியூர் ஓடையில் போடப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தோடு அடித்து சென்றது. 

இந்நிலையில் அவ்வழியே வந்த அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்தது. இப்பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்தனர். இவர்கள் சுமாரான காயத்துடன் தப்பினர். 

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாக்களின் வேண்டுகோளாய் உள்ளது.

Trending News