தாயை இழந்த குட்டி யானைகளை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்!

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2023, 10:49 AM IST
  • குட்டிகள் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் இணைந்ததா என்பது இதுவரை தெரியவில்லை.
  • மின்வேலியில் சிக்கி 2 பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன.
  • இரவு, பகலாக தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தாயை இழந்த குட்டி யானைகளை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்! title=

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன. இதனால் இரண்டு குட்டி யானைகள் தாயை இழந்தன. இந்த குட்டிகள் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் இணைந்ததா என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாரண்டஹள்ளி காப்புக்காடுகள் மற்றும் காளிகட்டா வனப்பகுதியில் சுற்றித் திரிகிறதா என
தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் பாலக்கோடு வனத்துறையினருடன் இணைந்து தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: முதல் அடி எடுத்து வைக்க போராடும் குட்டியானை! வேதனையுடன் பதறும் தாய் யானை!

கடந்த சில நாட்களாக இப்பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குட்டி யானைகளை புகைப்படம் எடுத்து அவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இரவு, பகலாக தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரை உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகளுக்கு அறிவுத் திறன் அதிகம் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News