தந்தையை துடிதுடிக்க கொலை செய்த வளர்ப்பு மகள்..!

வளர்ப்பு மகளால் தந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரோடு சேர்ந்து கொலை செய்த பெண் போலீசில் பிடிபட்டது எப்படி ? இதோ....

Written by - Gowtham Natarajan | Last Updated : May 10, 2022, 03:21 PM IST
  • கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட தந்தை
  • நகைக்காக வளர்ப்பு மகள் வெறிச்செயல்
  • கணவரோடு கைதான பெண்ணின்- வாக்குமூலம்
தந்தையை துடிதுடிக்க கொலை செய்த வளர்ப்பு மகள்..! title=

மதுரை மாநகர் சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி தம்பதி. இவர்கள் இருவரும் தங்களது வளர்ப்பு மகள் நிவேதாவுடன் வசித்து வந்தனர். இதற்கிடையே, மகள் நிவேதா காரைக்குடி அருகேயுள்ள மானகிரியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரை காதலித்துள்ளார். சொந்த மகளை போல வேண்டியதை செய்து கொடுத்த கிருஷ்ணாராம், மகள் ஆசைபட்ட நபருக்கே அவரை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அதோடு கடமையை முடித்துக்கொள்ளாமல், மருமகன் ஹரிகரனுக்கு தனது வீட்டின் அருகிலேயே ஜூஸ் கடை ஒன்றை வைத்து கொடுத்தும் உதவியுள்ளார். இப்படியெல்லாம் விழுந்து விழுந்து கவனித்த தந்தையை, கவனித்துக்கொள்வதில் இருந்து மகள் நிவேதா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றியிருக்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், வெறுப்பு என அக்னியை கொட்டி தீர்த்திருக்கிறார். 

crime,murder,madurai krishnaram murder,வளர்ப்பு மகள், தந்தையை கொன்ற வளர்ப்பு மகள்

இதனால் மனமுடைந்து போன, கிருஷ்ணாராம் மகளிடம், நடந்ததை மனம்விட்டு கேட்டிருக்கிறார். இதில், இருவருக்குமிடையே கடும் வாக்கு ஏற்பட்டது.மகளும், மருமகனும் சேர்ந்து ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டி தீர்க்க கோபத்தில் அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லியிருக்கிறார்,கிருஷ்ணாராம். இந்நிலையில்தான், மறுநாள் காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணராம் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணராமின் மனைவி பங்கஜவள்ளி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனே போலீசாருக்கும் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இறந்து கிடந்த கிருஷ்ணராமின் உடலை ஆய்வு செய்தவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர்.

crime,murder,madurai krishnaram murder,வளர்ப்பு மகள், தந்தையை கொன்ற வளர்ப்பு மகள்

மேலும் படிக்க | பெற்றோரின் கவனக்குறைவால் 4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்..!

விசாரணையில் கொலையுண்ட கிருஷ்ணராமின் வளர்ப்பு மகளான நிவேதா,அவரது கணவர் ஹரிகரன் மற்றும் நண்பர் சுரேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மேல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணராமை கத்தியால் குத்தி கொலை கொடூரமாக செய்தது தெரியவந்தது. பின்னர், வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனை அடுத்து வளர்ப்பு மகள் நிவேதா அவரது கணவர் ஹரிகரன், மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய 3பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து பங்கஜவள்ளியிடம் ஒப்படைத்தனர். தங்க நகைக்காக குழந்தையிலிருந்து வளர்த்த தந்தையை, வளர்ப்பு மகளே படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | கழிவறையால் உயிரை விட்ட காதல் மனைவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News