தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க திட்டம்- என்ஐஏ திடீர் சோதனை பின்னணி

தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் எதிரொலியாக சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 30, 2024, 05:55 PM IST
  • தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் சோதனை
  • தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க திட்டம்
  • சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை
தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க திட்டம்- என்ஐஏ திடீர் சோதனை பின்னணி title=

தமிழ்நாட்டில் சென்னை,திருச்சி, கும்பகோணம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக ஹிஸ்புல்த் தாஹீர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | 101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்... கூடவே மாதம் ரூ.5000 - ரோட்டரி கிளப் அசத்தல்!

அந்த ஹிஸ்புத் தாஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை பரப்பும் வகையிலும் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்பில் ஆட்கள் சேர்க்கும் முயற்ச்சியிலும் ஈடுபட்டு வருவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு இடம் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்,அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்டோர் இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் இபி காலனி பகுதியைச் சேர்ந்த கபீர் அகமது (40) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி குமரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கபீர் அகமது இஸ்புல்த் தாஹிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனைக்கு பிறகு எந்த மாதிரியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட சோதனை மற்றும் நடவடிக்கை இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். சென்னை உட்பட 12 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேல் கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News