பல்லடம் : தோட்டத்து வீட்டில் 3 பேர் படுகொலை - கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை

Palladam Murder | திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை கொலை செய்து விட்டு தப்பியோடிய கொலையாளிகள். காவல்துறை 5 தனிப்படைகள் அமைத்து தேடுகிறது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 29, 2024, 01:02 PM IST
  • பல்லடத்தில் 3 பேர் படுகொலை
  • காவல்துறை அதிகாரிகள் குவிந்தனர்
  • 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல்
பல்லடம் : தோட்டத்து வீட்டில் 3 பேர் படுகொலை - கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை

Palladam Triple Murder | பல்லடத்தில் ஒரே வீட்டில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே உள்ளது சேமலைகவுண்டம்பாளையம். அப்பகுதியில் தான் இந்த கொடூர கொலை சம்பம் அரங்கேறியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த இரண்டு முதியவர்கள் மற்றும் மகன் உட்பட மூன்று பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலை சம்பவம் நடந்த இடத்தில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர். 

Add Zee News as a Preferred Source

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி, அலமாத்தாள் ஆகிய தம்பதியினர் தங்களது தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். அவரது மகன் செந்தில்குமார் ஐடி நிறுவனத்தில் கோவையில் பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி கவிதா, மற்றும் தனது மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வருகிறார். உறவினர் ஒருவருக்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தாய், தந்தையுடன் வீட்டில் தங்கியிருக்கிறார். 

நேற்றிரவு இவர்கள் தங்கியிருந்த தோட்டத்து வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்களை பார்த்து நாய் குரைத்ததால் வீட்டுக்கு வெளியே வந்திருக்கிறார் தெய்வசிகாமணி. உடனே அவரை மர்ம நபர்கள் கொலை செய்த நிலையில், இதனை தடுக்கச் சென்ற அலமாத்தாள் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துள்ளனர். இன்று காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த சவரத் தொழிலாளர் ஒருவர், மூன்று பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை! கொலையாளி கைது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கொலை நடந்த வீட்டில் இருந்து 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி கொலை நடந்த இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது பேசிய அவர், " திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டு 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகளை ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. கொலையாளிகள் வேறு மாநிலங்களுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கேரளா ரியல் எஸ்டேட் பெண் புரோக்கர் கொலை... கள்ளக்காதல் ஜோடி சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

...Read More

Trending News