Rajiv கொலை வழக்கு: 7 குற்றவாளிகளின் விடுதலையில் ஆளுநர் மீது தமிழக அமைச்சர்கள் நம்பிக்கை!

இவை 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பின்னணியில் வரும் கருத்துக்களாகக் காணப்பட்டாலும், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மீதான அமைச்சர்களின் நம்பிக்கைகள் பலனளிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளும் தென்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2020, 08:47 AM IST
  • ஆளுநர் அவர்கள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர்கள் நம்பிக்கை.
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு பயணம்.
  • ஏழு குற்றவாளிகளும் விடுவிக்கப்படுவது குறித்து நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை கொண்டுள்ளார்.
Rajiv கொலை வழக்கு: 7 குற்றவாளிகளின் விடுதலையில் ஆளுநர் மீது தமிழக அமைச்சர்கள் நம்பிக்கை! title=

சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஏழு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான சாத்தியங்கள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் (Tamil Nadu) அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவை 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பின்னணியில் வரும் கருத்துக்களாகக் காணப்பட்டாலும், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (Banwarilal Purohit) மீதான அமைச்சர்களின் நம்பிக்கைகள் பலனளிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளும் தென்படுகின்றன.

மேலும் தாமதமின்றி ஏழு குற்றவாளிகளும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வெள்ளிக்கிழமை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். "ஆளுநர் அவர்கள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்," என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை, கோவையில் பேசிய முதலமைச்சர் கே.பழனிசாமி (K Palanisamy), ஆளுநருக்கு இந்த விடுதலை தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்தை தங்கள் அரசாங்கம் ஏற்கனவே அனுப்பியுள்ளதாகவும், அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

சுவாரஸ்யமாக, இந்த அறிக்கைகள் தமிழக ஆளுநர் புரோஹித், பிரதமர், உள்துறை அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் மற்றும் இந்திய துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்திக்க டெல்லிக்கு சென்ற பிறகு இந்த அறிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள்” குறித்து விவாதிக்க ஆளுநர் டெல்லிக்கு சென்றுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 3 ம் தேதி, மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பிய ராஜீவ் காந்தி குற்றவாளிகளை விடுவிப்பதற்கான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதால் உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது.

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) படுகொலை வழக்கின் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டத்தை ஆராய்ந்து வரும் பன்முக ஒழுங்கு கண்காணிப்பு முகமை (MDMA) விசாரணையின் காரணமாகவே ஆளுநரின் முடிவில் இருந்த தாமதத்திற்கு காரணம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. எப்படியும், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஆளுநரின் முடிவில் MDMA விசாரணை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

ALSO READ: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? - PMK கேள்வி...

ஏழு குற்றவாளிகளும் விடுவிக்கப்படுவது குறித்து நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“மாநில அமைச்சரவை 2018 செப்டம்பரில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அது கவர்னருக்கு கட்டுப்படுகிறது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் 9, 2018 அன்று விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசியலமைப்பு அமர்வால் தீர்ப்பளிக்கப்பட்ட 3 முந்தைய வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில், ஆளுநருக்கு 161 வது பிரிவின் கீழ் எந்த பாத்யதயும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கூட, மாநில அரசு அவர்களை விடுவிக்க முடியும்." என்று அவர் கூறினார்.

பேரறிவாளன் மற்றும் நளினி (Nalini) ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் முறையே உச்ச நீதிமன்றம் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னையின் புறநகர்ப் பகுதியில், மே 21 அன்று எல்.டி.டி.இ (தமிழீழ விடுதலை புலிகள்) தற்கொலை குண்டுவெடிப்பால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி மற்றும் அவரது கணவர் உட்பட 7 பேர் சிறப்பு தடா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். 

ALSO READ: #துள்ளி_வருது_வேல்: துள்ளி வரும் வேலைக் கண்டு கழகங்கள் அஞ்சுவது ஏன்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News