இக்கட்டான நிலையில் சசிகலா கணவர்!

Last Updated : Sep 27, 2017, 08:51 AM IST
இக்கட்டான நிலையில் சசிகலா கணவர்! title=

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த சில மாதங்களாகவே சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரலில் பிரச்சினை இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு இவர் முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 
தற்போது குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. 

நேற்றைய தினம் குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடராஜன் கவலைக்கிடமாக உள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. 

கல்லீரல் செயல் இழந்துவருதால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், கல்லீரலோடு, சிறுநீரகமும் நடராசனுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதால், வேறு சிறுநீரகமும் பொறுத்த வேண்டிய நிலை உள்ளது.

Trending News