Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது... இந்த முறை என்ன காரணம்?

Savukku Shankar Goondas: தேனியில் சவுக்கு சங்கரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Aug 12, 2024, 09:32 PM IST
  • ஏற்கெனவே அவர் மீது குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.
  • விரைவில் விடுதலை ஆவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வழக்கு.
  • மே 4ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் கைதானார்.
Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது... இந்த முறை என்ன காரணம்? title=

Savukku Shankar Goondas Act: பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோயமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கரின் கார் மற்றும் அவர் தங்கியிருந்த அறையில் தேனி போலீசார் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.  

இந்த சோதனையை அடுத்து அவரது உதவியாளர் மற்றும் நண்பர்கள் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் சவுக்கு சங்கர் மீதும் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மீண்டும் குண்டர் சட்டம்

இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில், ஆட்சியர் ஷஜீவனா உத்தரவில் தற்போது சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்களை போராட தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர ஆணையர் உத்தரவில் குண்டர் தடுப்புச் சட்டம் முன்னர் பதியப்பட்டது.

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

உயர் நீதிமன்றம் கேள்வி

இந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆக. 9ஆம் தேதி அன்று ரத்து செய்தது. முன்னதாக இந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த வழக்கில், விசாரணையின் போது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்துக்குரியது என்றும் இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை பெற்றுத்தரலாம் என்றும் தெரிவித்தார். 

மேலும், அதை தவிர்த்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏன் பயன்படுத்தினீர்கள் என போலீசாரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆங்கிலேர்களின் காலத்தில் இயற்றப்பட்ட இந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை தற்போதும் நாம் பயன்படுத்தினோம் என்றால் அது நம்மை ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்திற்குதான் கொண்டுச் செல்லும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தினர். அதுமட்டுமின்றி காவல் துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் குறித்து திரைப்படங்களிலும்தான் விமர்சனம் செய்யப்படுகிறது, அப்படியென்றால் அனைவர் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா" என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் குழித்துறை நீதிமன்றம் உத்தரவு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News