அமைச்சர் பொன்முடி உடனடியாக சிறை செல்ல வேண்டுமா?

Ponmudi News: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 30 நாட்களுக்கு அவர் சிறை செல்ல தேவையில்லை.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 21, 2023, 12:09 PM IST
  • பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை
  • 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு
  • அபராதம் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக 6 மாதம் சிறை
அமைச்சர் பொன்முடி உடனடியாக சிறை செல்ல வேண்டுமா? title=

பொன்முடி வழக்கின் தண்டனை விவரம்

அமைச்சர் பொன்முடி (Minister Ponmudi) மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. ஏற்கனவே குற்றம் நீருபிக்கப்பட்டுள்ள நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான தண்டனை விவரத்தை நீதிபதி ஜெயச்சந்திரன் வாசித்தார். அதில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்

பொன்முடி சிறை செல்ல வேண்டுமா?

அதன்படி, பொன்முடி 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அங்கும் தண்டனை நிறுத்தி வைப்பு குறித்து கோரிக்கை வைக்க வேண்டும். அதில் உச்சநீதிமன்றம் விலக்கு கொடுத்தால் மட்டுமே அவர் சிறை செல்வதில் இருந்து விலக்கு பெற முடியும். ஒருவேளை உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்கவில்லை என்றால் பொன்முடி சிறை செல்ல வேண்டியிருக்கும். அதேநேரத்தில் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. 30 நாட்கள் வரை பொன்முடி சிறை செல்ல நேரிடாது.

அபராதம் செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை

பொன்முடி இப்போது சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறினால் பொன்முடி கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு

பொன்முடி வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன் தண்டனையை நிறுத்தி வைக்க காலவகாசம் 60 நாட்கள் கொடுக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதனை பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வைத்தார்.  இதனை பரிசீலித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பொன்முடி தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அத்துடன் 30 நாட்களுக்கு மட்டும் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். அதற்குள் அவர் உச்சநீதிமன்றத்தை நாடி இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்து கொள்ளலாம்

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உறுதி? 2வது வழக்காக இன்று தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News