இலங்கை கடற்படையினர் அடாவடி: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Last Updated : Jul 5, 2018, 08:17 AM IST
இலங்கை கடற்படையினர் அடாவடி: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது! title=

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

 

 

கச்சத்தீவுக்கு அருகே செல்ல விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் படகுகளின் எண்களை இலங்கை கடற்படையினர் பதிவு செய்ததாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே 12 தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் 2 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் அவர்கள் விரட்டியடித்தனர். 

Trending News