இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி

Last Updated : Mar 7, 2017, 10:54 AM IST
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி title=

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு ராமேஸ்வரம் மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது. இதன் காரணமாக மற்ற மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து கரைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 

இலங்கை மீனவர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், படகுகளை பறிமுதல் செய்வது, தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் 

கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீனவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வன்முறை ஏற்படாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு தமிழக போலீஸ் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது. 

துப்பாக்கி சூடு சம்பவம் ஆதம்பாலம் பகுதியில் நடந்தது. இலங்கை கடற்படையினர் குண்டுமழைகளை பொழிந்தனர். அதனால் நாங்கள் உயிருக்கு பயந்து ஓடி வந்துள்ளோம் என கரைக்கு திரும்பிய மீனவர்கள் கூறினார்கள்

Trending News