தமிழகத்தில் உயரும் இறப்பு எண்ணிக்கை: இன்று 34,285 பேருக்கு பாதிப்பு, 468 பேர் உயிர் இழப்பு!!

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 34,285 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 468 பேர் இறந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2021, 09:43 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 34,285 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 468 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
  • இன்று 28,745 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
தமிழகத்தில் உயரும் இறப்பு எண்ணிக்கை: இன்று 34,285 பேருக்கு பாதிப்பு, 468 பேர் உயிர் இழப்பு!!  title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. 

செவ்வாயன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) 34,285 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 468 பேர் இறந்தனர். 
 
இன்று 28,745 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,06,652,  ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 4,041 பேர் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர கோயம்பத்தூரிலும் மிக அதிகமாக 3,632 பேர் இன்று புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தவிர,  செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது. 

இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 19,272 ஆண்களும் 15,013 பெண்களும் அடங்குவர். 

தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் இன்று மிக அதிக அளவில் இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது. 

ALSO READ: பூஞ்சை நோய் தொற்று நோய் அல்ல: AIIMS தலைவர் ரன்தீப் குலேரியா

கடந்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து எழுச்சியைக் கண்டு வந்த தொற்றின் அளவு தற்போது சரிவைக் கண்டு வருகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி இன்று 34,285 என்ற அளவில் உள்ளது. 

தமிழகத்தில் நேற்று முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு முன்னர், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தது. ஊரடங்கின் விளைவு தற்போது தெரியத் தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

முன்னதாக, தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (M.Subramanian), நேற்று சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள 890 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னையில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையங்களில் 200 படுக்கைகள் காலியாக உள்ளன என்று கூறினார். மேலும், சென்னையில் கூடுதலாக இன்னும் சில சித்தா சிகிச்சை மையங்களையும் அமைக்க நடாவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

கொரோனா சிகிச்சை குறித்து பேசிய அமைச்சர், கொரோனா பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததும் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுக்கத் தேவையில்லை என்று கூறினார். பாசிடிவ் என பரிசோதனை முடிவு வந்ததும், முதலில் அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு சென்று, உடல் நலம் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை முதலில் கேட்டறிய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

ALSO READ: Sputnik V தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News