மண்ணெண்ணெய் தட்டுபாட்டுக்கு மத்திய அரசே காரணம் - தமிழக அரசு குற்றச்சாட்டு

ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 28, 2023, 07:32 AM IST
மண்ணெண்ணெய் தட்டுபாட்டுக்கு மத்திய அரசே காரணம் - தமிழக அரசு குற்றச்சாட்டு  title=

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுகிறது. அனைத்து பயனாளிகளுக்கும் கொடுக்க முடியாததால் ரேஷன் அட்டைதாரர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

மத்திய அரசே காரணம்

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டை போக்க வரும் ஆண்டுகளில் இருந்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம்.

மேலும் படிக்க | ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மனோதங்கராஜ்!

மண்ணெண்ணெய் குறைப்பு

2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் மண்ணெண்ணெய் அளவு 59 ஆயிரத்து 812 கிலோ லிட்டராக இருந்தது. இது 2021-ல் 7,510 கிலோ லிட்டராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டரிலிருந்து தற்போது 2712 கிலோ லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மண்ணெண்ணையை தமிழ்நாடு அரசு தான் ஏதோ குறைத்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசுக்கு 9000 மேற்பட்ட கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது.

மத்திய அரசு கொடுக்கவில்லை

தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு 29 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கக்கூடிய நிலையில் மண்ணெண்ணெய் வழங்கக்கூடிய அளவை குறைத்துள்ளது. மத்திய அரசின் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளத்தால் ஏழை எளிய மக்கள் பாதிப்புகுள்ளாகி உள்ளனர். குறிப்பாக மலைப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இற்காக 2 முறை கடிதம் எழுதியும் அதை கருத்தில் கொள்ளவில்லை.

கோதுமை குறைப்பு

பொருளாதார நெருக்கடி, நிதிச்சுமைகளுக்கு இடையேயும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பொது விநியோக திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருள்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல கோதுமை அளவும் 30 ஆயிரத்து 636 மெட்ரிக் டன் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 8132 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சிறுதானிய திட்டம்

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்ற சாதனையை எட்டும். கோதுமை தட்டுப்பாட்டை போக்க வரும் ஆண்டுகளில் இருந்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் வழங்கும் திட்டம் நீலகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அடுத்த மாதம் சோதனை முறையில் துவங்கப்பட உள்ளது என்றார்.

மேலும் படிக்க | கோழைத்தனமான பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌... அண்ணாமலை ஆடியோவுக்கு பிடிஆர் விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News