ஐஏஎஸ் பயிற்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது!

டெல்லி தற்கொலை செய்துகொண்ட ஐஏஎஸ் பயிற்சி மாணவி ஸ்ரீமதி உடல் தகனம் செய்யப்பட்டது.

Last Updated : Oct 29, 2018, 12:50 PM IST
ஐஏஎஸ் பயிற்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது! title=

டெல்லி தற்கொலை செய்துகொண்ட ஐஏஎஸ் பயிற்சி மாணவி ஸ்ரீமதி உடல் தகனம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் ஸ்ரீமதி. இவர் டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார்.

இவர் பயிற்சி மையத்தின் அருகில் உள்ள குடியிருப்பில் தனிஅறை எடுத்து தங்கி இருந்த படித்து வந்தார். நேற்று மாலை மாணவி ஸ்ரீமதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அங்கு கடிதம் ஒன்று மீட்டனர். அதில் என்னை மன்னித்து விடுங்கள். தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் டெல்லி விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தனிவாகனம் மூலம் சொந்த ஊரான ஆலாம்பாளையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஸ்ரீமதி உடலுக்கு இறுதிசடங்குகள் செய்து உடல் தகனம் செய்யப்பட்டது.

Trending News