இந்திய அரசு அளிக்கும் Free AI Training, 9 மொழிகளில் கிடைக்கும்: விவரம் இதோ

AI Training: GUVI ஒன்பது இந்திய மொழிகளில் ஒரு புதிய இலவச AI ப்ரொக்ராமிங் கோர்சை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2023, 11:33 AM IST
  • AI ப்ரொக்ராமிங்குக்கான இலவச படிப்பு.
  • இந்திய அரசாங்கம் வழங்கும் அரிய வாய்ப்பு.
  • முன் அனுபவம் தேவை இல்லை.
இந்திய அரசு அளிக்கும் Free AI Training, 9 மொழிகளில் கிடைக்கும்: விவரம் இதோ title=

இந்திய அரசு அதன் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய இலவச செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்புகளை (AI Training Course) அறிவித்துள்ளது. இந்த கோர்ஸ் ஆனது முழுமையாக செயற்கை நுண்ணறிவுக்கு (AI) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கில் இந்தியா மற்றும் GUVI மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றால் இந்த கோர்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோர்ஸ் செயற்கை நுண்ணறிவு அடிப்படைகள் (AI Basics), செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் (AI Applications) மற்றும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளை (AI ethics) ஆகியவற்றை உள்ளடக்கியது. செயற்கை நுண்ணறிவு பற்றிய திறன் மற்றும் புரிதலை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்காக இந்த கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏஐ -இல் முந்தைய அனுபவம் இல்லாதவர்களும் இந்த கோர்சில் சேரலாம். 

பல மொழிகளில் கிடைக்கிறது

GUVI தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தீர்வுகளை வழங்கும் முன்னணி எட்-டெக் நிறுவனமாகும். நிறுவனம் ஐஐடி-மெட்ராஸ் மற்றும் ஐஐஎம்-அகமதாபாத் ஆகியவற்றால் நிறுவப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் பல்வேறு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப திறன்களை கற்பிப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. GUVI ஆனது பரந்த அளவிலான ஆன்லைன் கற்றல், மேம்பாடு மற்றும் ஆட்சேர்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது.

GUVI இன் நோக்கம் இந்தியாவில் கல்வியை மேலும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும் ஆக்குவதாகும். எந்த விதமான பின்னணியையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கற்றுக்கொள்ள உரிமை உண்டு என்று நிறுவனம் நம்புகிறது. மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் GUVI உறுதிபூண்டுள்ளது.

மேலும் படிக்க | AI தொழில்நுட்பம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் - பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டுவிடாதீர்கள்

கோர்ஸ் 9 மொழிகளில் உள்ளது

GUVI ஆனது ஒன்பது இந்திய மொழிகளில் ஒரு புதிய இலவச AI ப்ரொக்ராமிங் கோர்சை அறிமுகப்படுத்தியுள்ளது. GUVI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து இந்த கோர்சில் சேர்ந்து பாடங்களை கற்கலாம். பதிவு செய்யும் போது, ​​உங்களுக்கு ஏதேனும் முன் குறியீட்டு அனுபவம் (கோடிங் எக்ஸ்பீரியன்ஸ்) உள்ளதா என்று கேட்கப்படும். உங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், நீங்கள் இந்த கோர்சில் பங்கேற்கலாம்.

இந்த பாடத்திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் பிரதான், இந்திய மொழிகளில் தொழில்நுட்ப படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொழில்நுட்பக் கல்வியில் மொழித் தடைகளை நீக்குவது மிகவும் முக்கியம் என்றும், நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு இந்தப் படிப்பு ஒரு முக்கியமான படியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா 2.0 திட்டத்திற்காக, AI கோர்சை ஆன்லைனில் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் நாடு முழுவதும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் வரம்பை விரிவுபடுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. திட்டத்தின் தரம் மற்றும் பொருத்தம் NCVET மற்றும் IIT மெட்ராஸ் மூலம் சரிபார்க்கப்பட்டது.

பரந்த பயன்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

ஏஐ -இன் பயன்பாடுகள் பரவலானவை. மேலும் சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏஐ -இன் சில பொதுவான பயன்பாடுகளில் வர்சுவல் அசிஸ்டண்ட், அடானமஸ் வெஹிகல்ஸ், மோசடி கண்டறிதல் அமைப்புகள், மருத்துவ சிகிச்சை, மொழிபெயர்ப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகியவை அடங்கும்.

ஏஐ -இல் வாய்ப்புகள்

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மகத்தான சாத்தியக்கூறுகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது. இது நெறிமுறை மற்றும் சமூகக் கருத்தாய்வுகளையும் மேம்படுத்துகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் பொறுப்பான மேம்பாடு மற்றும் பயன்பாட்டை உறுதி செய்தல், தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் வேலைச் சந்தை மற்றும் பணியாளர்கள் மீதான தாக்கத்தை கருத்தில் கொள்வது ஆகியவை ஏஐ தொடர்பான விவாதத்தின் முக்கிய அம்சங்களாகும்.

மேலும் படிக்க | ChatGPT மூலம் நீங்கள் கோடீஸ்வரரும் ஆகலாம்... அது எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News