வேளச்சேரி ராட்சத பள்ளம் விபத்து தொடர்பாக காவல்துறையினர் கட்டுமான மேற்பார்வையாளர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமான அனைவரது மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கில்டு தெருவில் கழிப்பறை வசதி இல்லாததால், அங்கு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையிலேயே சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஜீ தமிழ் நியூஸ் கள ஆய்வு செய்தது. அதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பு இதோ.
சென்னை கொடுங்கையூரில் புதிதாக வீடு கட்டும் பெண்ணுக்கு திமுக கவுன்சிலரின் கணவரும் அவரது அடியாட்களும் மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கழிவுநீரைத் தாங்கும் குழாய்கள் காரணமாக ஏற்கனவே சாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வருடா வருடம் பெய்யும் கன மழையும் இந்த நிலையை இன்னும் மோசமடையச் செய்கின்றது
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவம்பர் 10 மற்றும்11) விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
குப்பை கொட்டி 6.5 லட்சம் அபராதம் கட்டியவர்கள். பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.