கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் தனது முதல் ரகசிய காதலனை, 2-வது ரகசிய காதலன் மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, சாலையில் ஒதுங்கிச் செல்லக் கூறிய வயதான தம்பதியின் இருசக்கர வாகன சாவியைப் பறித்து சாலையில் வீசிச் சென்ற பெண்ணின் வீடியோ வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைச் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்த நிலையில், வெடிகுண்டை வெடிக்கச் செய்தது டொமினிக் மார்ட்டின் என்பவர்தான் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தாய்-தந்தை பணம் தாராத ஆத்திரத்தில், ஏடிஎம்மை உடைத்து திருட முயன்ற 17 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறார் சிறையில் அடைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.