கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கழுவில் நிறைவேறிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
EPS Pressmeet About Supreme Court Verdict: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான் என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், தீர்மானத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என விளக்கம் கொடுத்திருக்கும் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு இது வெற்றியெல்லாம் இல்லை என தெரிவித்துள்ளது.
EPS Campaign in Erode East: கடந்த பொதுத்தேர்தலில் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய கட்சிதான் திமுக என்றும் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாரை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நிதியுதவி வழங்கினார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.