அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கர் ஒரு மருத்துவ பயிற்சியாளராக மீண்டும் பதிவுசெய்துள்ளார், மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது உதவ வாரத்திற்கு ஒரு ஷிப்ட் வேலை செய்வார் என்று அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பகுதியாக நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு என்னை அழைக்காமல், ஹைதராபாத்தை அவமதிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘இரவு 9 மணி -9 நிமிட’ நிகழ்வின் போது பட்டாசு வெடித்ததற்காக, கொல்கத்தா காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 98 பேரை கைது செய்துள்ளனர்.
BCCI தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலி போன்ற பிரபல விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வீடியோ கான்ப்ரசிங் வழியாக பேசவுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் (COVID-19) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டதன் வெளிச்சத்தில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் (TNPHA), 1939 மற்றும் தொற்று நோய்கள் சட்டம், 1897 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவது சட்டப்படி குற்றம் என பொது இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
பிரதமர் மோடியுடனான தனது வீடியோ கான்ப்ரஸிங் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாநிலத்திற்கு சோதனை கருவிகளின் விநியோகத்தை அதிகரிக்க 3000 கோடி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கொரோனா பரவை தடுக்கும் முயற்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் முழுஅடைப்பினை அறிவித்துள்ளார். இந்த முழு அடைப்பின் போது எந்த சேவை கிடைக்கும்? எந்த சேவை கிடைக்காது? என நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் கடுமையான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று முழு நாட்டையும் முற்றிலுமாக அடைப்பதாக அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். அதை சேமிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் மோடி கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க ஒரு பிராந்திய மூலோபாயத்தை வகுக்க பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் மார்ச் 15 அன்று வீடியோ மாநாட்டை நடத்தினர்.
கொடிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக "தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பீதியடைய தேவையில்லை" என்றும் மற்ற சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்ட பகுதி இதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை கலைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசாங்கம் சர்வதேச கச்சா எண்ணெய் 35% வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை கவனிக்க தவறிவிட்டது.
கொரோனா வைரஸின் சந்தேக அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வங்காளத்தில் இறந்துள்ள விவகாரம் தற்போது நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வங்கதேசத்தில் மூன்று கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இந்திய பிரதமரின் டாக்கா பயணம் ரத்து செய்யப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் மேலும் நாடு முழுவதும் பரவாமல் தடுக்க அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் எடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அடுத்து இந்த ஆண்டு எந்தொரு ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கான விடையினை மக்களுக்கு மற்றொரு ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) அமைக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.