ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கான நீண்டகால எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வந்தன. சினிமா விமர்சகர்களின் விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பு முதல் நாளன்று பலமாகவே இருந்தது.
கடந்த திங்கள்கிழமை தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைநகர் தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விருதுக்கு காரணமான மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி ஜெய் ஹிந்த் என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணைமந்திரி எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர்.
இன்று இந்த படத்தில் இடம்பெற்ற "மருதாணி செவப்பு செவப்பு" என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.