சட்டவிரோத குடியேறிகளின் தலைநகரமாக இந்தியா மாறக் கூடாது. ரோஹிங்கியா முஸ்லிகள் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் என மத்திய அரசு வாதிட்டது
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நீதிபதி ரமணா 1983 ஆம் ஆண்டில் சட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆந்திராவின் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் மற்றும் சிவில், குற்றவியல், இந்திய உச்ச நீதிமன்ற செயல்முறைகள், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் விஷயங்கள் ஆகியவற்றில் அவர் பயிற்சி பெற்றவர்.
நோட்டாவுக்கு அதிக பட்சமான வாக்குகள் கிடைத்தால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
Reliance-Future Deal:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ்-ப்யூச்சர் குழுமத்தின் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
2020 அக்டோபரில் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு சட்ட போராட்டங்கள் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்வு எழுதுவோருக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தளர்வு ஒரு முறை வழங்கப்படும் தளர்வாக மட்டுமே இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
பொது நலன் மனுவில், சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், தீய நோக்கத்துடன் போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடர சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் இதுதொடர்பான உத்தரவுக்கு மத்திய அரசு இதுவரை எந்த மனுவையையும் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை நலனை கருத்தில் கொள்ளாமல், சுய லாபத்திற்காக, விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும் பேஸ்புக் இந்தியா (Facebook India) சந்தாதாரர்கள் மற்றும் பயனர்களின் விவரங்களையும் தரவுகளையும் பகிர்ந்து கொள்வதை தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.