சுமார் 28 ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணை போதும்.... இன்று மாலை 5 மணிக்குள் அயோத்தி வழக்கு சம்பந்தமான வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவு.
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லா நாட்டை நோக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திற்கு இணங்க, நீதிமன்ற வளாகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் தயாரிப்புகளை தடை செய்ய ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முழு நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் மராட்டில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு கட்டிடங்களில் உள்ள பிளாட் உரிமையாளர்களுக்கு தலா ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் என நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அகில் குரேஷியை மத்திய பிரதேசத்திற்கு பதிலாக திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது!
தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்யதயாராக இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்!!
அயோத்தி வழக்கை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.