வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீரழிவைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் தர கால நிர்ணயம் வகுக்கும் வகையில் அரசியலைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.