தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்

தாய்லாந்தின் கோவிட்-19 சூழ்நிலை நிர்வாகத்திற்கான மையம் (CCSA) இப்போது தாய்லாந்து பாஸ் திட்ட பதிவுக்கான கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2022, 08:29 PM IST
  • பொதுவான SOP விதிகளை பின்பற்ற ஆலோசனை.
  • நாடு முழுவதும் வணிகங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
  • சுகாதார காப்பீடு கட்டாயமில்லை.
தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான் title=

தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க அல்லது வணிகப் பயணத்தைத் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளவர்கள் என்றால் , இதோ உங்களுக்கான நல்ல செய்தி! தாய்லாந்து அரசாங்கம் தாய்லாந்து பாஸ் மற்றும் கட்டாய மருத்துவக் காப்பீட்டின் நிபந்தனையை நீக்கி, நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்த தடை தாய்லாந்து குடிமக்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி நீக்கப்பட்டது, இப்போது அது வெளிநாட்டினருக்கும் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார காப்பீடு கட்டாயமில்லை

தாய்லாந்தின் கோவிட்-19 சூழ்நிலை நிர்வாகத்திற்கான மையம் (CCSA) இப்போது தாய்லாந்து பாஸ் திட்ட பதிவுக்கான கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. மேலும், ஜூலை 1, 2022 முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு US$ 10,000  மதிப்புள்ள சுகாதாரக் காப்பீடு இனி கட்டாயமில்லை.

தேவையான ஆவணங்கள் 

காப்பீடு இனி கட்டாயமில்லை. ஆனால் சில ஆவணங்கள் வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் தாய்லாந்து நாட்டவர்கள் இப்போது தடுப்பூசி சான்றிதழ் அல்லது  RT-PCR அல்லது ATK சோதனை செய்து, அதற்கான நெகடிவ் ரிப்போர்டை பயணம் செய்த 72 மணி நேரத்திற்குள் காட்ட வேண்டும். இவை அச்சு அல்லது டிஜிட்டல் வடிவில் காட்டப்படலாம்.

மேலும் படிக்க | உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

தாய்லாந்துக்கு வருபவர்கள் சர்வதேச விமான நிலையங்கள் அல்லது எல்லைச் சாவடிகளில் தோராயமாகத் திரையிடப்படுவார்கள் என்றும் CCSA தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாமலும், கோவிட் நோயின் நெகட்டிவ் பரிசோதனை அறிக்கை இல்லாமலும் இருந்தால், அவர்கள் ATK (ஆன்டிஜென் டெஸ்ட் கிட்) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பொதுவான SOP விதிகளை பின்பற்றஆலோசனை

ஆயினும்கூட,  இனி கட்டாயமில்லை என்றாலும், பயணிகள் மாஸ்க் மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களை அணிவது போன்ற பொதுவான SOP விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சமீபத்தில், நாடு முழுவதும் வணிகங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News