COVID 19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் வசிக்க பாதுகாப்பான best நாடு இதுதான்!!

கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 29, 2021, 03:01 PM IST
  • COVID-19 தொற்றுநோய் காலத்தில் பூமியில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்!!
  • ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.
  • நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பெற்றது சிங்கப்பூர்.
COVID 19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் வசிக்க பாதுகாப்பான best நாடு இதுதான்!! title=

புதுடெல்லி:  உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது. சில நாடுகளில் மெதுவாக இந்த தொற்றின் பிடி தளர்ந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்றின் இரண்டாவது மூன்றாவது அலைகள் மக்களுக்கிடையே பீதியை கிளப்பி வருகின்றன.

இந்த நிலையில், 'கொரோனா தொற்றே (Coronavirus) இல்லாத ஒரு இடம் உண்டா? இந்த அச்சம் இல்லாமல் வாழ ஒரு இடம் கிடைக்குமா?' என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கும். உங்களுக்குள்ளும் அப்படிப்பட்ட கேள்வி இருந்தால், அதற்கான விடை இதோ உள்ளது. COVID-19 தொற்றுநோய் காலத்தில் பூமியில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்!!

கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை (New Zealand) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.

"வைரசை வீழ்த்துவதிலும், தடுப்பூசி செயல்முறையை வேகமாக செயல்படுத்துவதிலும் ஆசியாவில் மிக வேகமாக செயல்பட்ட சிங்கப்பூர் இந்த மாதத்திற்கான ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. முதன் முறையாக சிங்கப்பூர் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. தொற்றுநோய் காலத்தில் மக்கள் வசிக்கக்கூடிய மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான இடங்களின் பட்டியலை இந்த அமைப்பு கண்டறிந்து வெளியிடுகிறது." என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை கூறியுள்ளது. 

ALSO READ: பீதியை கிளப்பும் கொரோனா: ஒரே நாளில் 3.79 லட்சம் தொற்று பாதிப்புகள்

சிங்கப்பூரில் (Singapore), நாட்டில் உள்நாட்டினர் மூலம் பரப்பப்படும் தொற்றின் அளவு பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது. அங்கு நாட்டும் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு விட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல முன்னெற்றத்தைக் கண்டு வரும் நாடுகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் கூட இன்னும் இந்த அளவு வெற்றியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நாடுகளான சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவையால் தற்போது தங்கள் மக்களுக்கு தொற்றுநோய்க்கு முன்னர் இருந்தது போன்ற வாழ்க்கைத் தரத்தை அளிக்க முடிகிறது. தொற்று மீண்டும் பரவாமல் இருப்பதைத் தடுக்க, சர்வதேச பயணங்கள் மட்டும் அங்கு தவிர்க்கப்படுகின்றன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தரவரிசையில் இடம்பெற்றுள்ள 53 நாடுகளில், இந்தியா 30 வது இடத்தில் உள்ளது. அர்ஜென்டினா, போலந்து மற்றும் பிரேசில் ஆகியவை தொற்றை சமாளிப்பதில் மிக மோசமாக செயல்படும் நாடுகளாக உள்ளன.

ALSO READ: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் Mask இல்லாமல் வெளியே செல்லலாம்: அமெரிக்காவில் புதிய விதிமுறைகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News