8th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 44%-க்கும் மேலாக அதிகரிக்கும் ஊதியம்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி. விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2022, 11:42 AM IST
  • 8வது ஊதியக்குழுவின் சமீபத்திய செய்திகள்.
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் திருத்தம் செய்ய கோரிக்கை.
  • குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரத்தில் இருந்து 26,000 ஆக அதிகரிக்கலாம்.
8th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 44%-க்கும் மேலாக அதிகரிக்கும் ஊதியம் title=

8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். ஊழியர்கள் அதன் பல பலன்களைப் பெறுகின்றனர். எனினும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும், அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த குறிப்பாணையில் உள்ள பரிந்துரைகளின்படி, சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது 8வது ஊதியக்குழுவை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும். மறுபுறம், 8வது ஊதியக்குழுவை அமலாக்குவது குறித்த எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. எனினும், ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படக்கூடும்

தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.18 ஆயிரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைப்புகள் கூறுவதாக எங்கள் இணை இணையதளமான ஜீ பிசினஸ் தெரிவித்துள்ளது. இதில், ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு இன்கிரிமென்ட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவில் 3.68 மடங்கு வரை வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்த காரணி 2.57 மடங்கு உள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆனால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி 38%லிருந்து 41% ஆக உயர வாய்ப்பா? 

4 ஆவது ஊதியக் கமிஷன்: ஊதியம் எவ்வளவு உயர்ந்தது 

- ஊதிய உயர்வு: 27.6%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 750

5 ஆவது ஊதியக் கமிஷன்: ஊதியம் எவ்வளவு உயர்ந்தது 

- ஊதிய உயர்வு: 31%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 2,550

6 ஆவது ஊதியக் கமிஷன்: ஊதியம் எவ்வளவு உயர்ந்தது (ஃபிட்மென்ட் ஃபேக்டர்)

- ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 1.86 மடங்கு
- ஊதிய உயர்வு: 54%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 7,000

7 ஆவது ஊதியக் கமிஷன்: ஊதியம் எவ்வளவு உயரும்? (ஃபிட்மென்ட் ஃபேக்டர் )

- ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 2.57 மடங்கு
- ஊதிய உயர்வு: 14.29%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ 18,000

8 ஆவது ஊதியக் கமிஷன்: ஊதியம் எவ்வளவு உயரும்? (ஃபிட்மென்ட் ஃபேக்டர்) 

- ஃபிட்மென்ட் ஃபேக்டர்: 3.68 மடங்குக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன
- ஊதிய உயர்வு: 44%
- குறைந்தபட்ச ஊதிய அளவு: ரூ. 26,000 (சாத்தியம்)

அரசாங்கம் ஒரு புதிய அமைப்பையும் தொடங்கலாம்

ஏழாவது ஊதியக் குழுவுக்குப் பிறகு எட்டாவது ஊதியக் குழு இருக்காது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாறாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை தானாக உயர்த்தும் ஒரு முறையை அரசு அமல்படுத்தப் போகிறது என கூறப்படுகின்றது. இது 'தானியங்கு ஊதிய திருத்த முறை'யாக (ஆடோமேடிக் பே ரிவிசன் சிஸ்டம்) இருக்கலாம். இதில் டிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால், சம்பளத்தில் தானாக திருத்தம் செய்யப்படும். இது நடந்தால், 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் நேரடி பலனைப் பெறுவார்கள். ஆனால், இது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இது குறித்து அரசு முடிவெடுக்கும் போது, ​​அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கலாம்

பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு நடுத்தர ஊழியர்களின் சம்பளம் கீழ் மட்டத்திலிருந்து அதிகரிக்க வேண்டும் என்பது நிதி அமைச்சகத்தின் கருத்தாக உள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில், 2023-ம் ஆண்டு புதிய சம்பள ஃபார்முலாவை அரசு கொண்டு வந்தால், நடுத்தர ஊழியர்களுக்கு அதிக பலன் கிடைக்காமல் போகலாம், ஆனால் குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அவர்களது அடிப்படை சம்பளம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும்.

ஒன்றியம் அரசுக்கு குறிப்பாணை சமர்ப்பிக்கும்

மத்திய ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சம்பள உயர்வு கோரிக்கைகள் குறித்து விரைவில் குறிப்பை தயாரித்து அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால், தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த இயக்கத்தில், ஊழியர்களுடன், ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களும் பங்கேற்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News