Post Office Scheme: போஸ்ட் ஆஃபீஸை சொந்தமாக்கி லட்சங்களை சம்பாதியுங்கள்

போஸ்ட் ஆஃபீஸை சொந்தமாக்கி, நீங்கள் லட்சங்களில் சம்பாதிக்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2022, 03:43 PM IST
  • புதிய பிஸ்னஸ் தொடங்க ஐடியா வேண்டுமா?
  • அரசுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பு
Post Office Scheme: போஸ்ட் ஆஃபீஸை சொந்தமாக்கி லட்சங்களை சம்பாதியுங்கள் title=

Post Office Franchise Scheme: நீங்கள் உங்கள் தொழிலைத் தொடங்க விரும்பினால், நல்ல வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. உண்மையில், இந்தியா போஸ்ட் உங்களுக்கு சம்பாதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இதில் நீங்கள் வெறும் ரூ. 5,000 சிறிய முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். இதன் மூலம் துறை தொடர்பான சேவைகளை வழங்கி பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. 

இந்தியா போஸ்ட்டுடன் சேர்ந்து நீங்கள் தொழிலைத் தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் இது உங்களுக்கு நல்ல வருமான ஆதாரமாக இருக்கும். இதன் கீழ், இரண்டு வகையான உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போஸ்ட் ஃபிரான்சைஸ் அவுட்லெட் மற்றும் இரண்டாவது தபால் முகவர். இரண்டில் எந்த வேலையை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து செய்யலாம். 

தபால் அலுவலக சேவை 

இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு அனைத்து வகையான சேவைகளையும் வழங்குகிறது. மணி ஆர்டர் அனுப்புதல், தபால் மற்றும் கடிதங்களை அனுப்புதல், முத்திரைகள் மற்றும் எழுதுபொருட்களை அனுப்புதல் ஆகியவை இதில் அடங்கும். இதுமட்டுமின்றி, தபால் துறை பல சிறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சிறுசேமிப்பு கணக்கு தொடங்குதல், பண வைப்புத்தொகை, அஞ்சலகத்தின் பிற திட்டங்களை செயல்படுத்துதல் அல்லது ஆயுள் சான்றிதழ் தயாரித்தல் போன்ற பல பணிகள் இந்த தபால் நிலையங்களில் செய்யப்படுகின்றன.

தபால் நிலையங்கள் 

நாட்டின் பல பகுதிகளில் தபால் நிலைய வசதிகள் இன்னும் இல்லை. அதாவது, தபால் அலுவலகம் தொடர்பான பணிகள் அதிகரித்து வரும் வேகத்திற்கு ஏற்ப, நாட்டில் அவற்றின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நாட்டில் தற்போது 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு தபால் நிலையங்களின் வரம்பை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து உங்கள் தொழிலைத் தொடங்கலாம். துறை தொடர்பான சேவைகளை செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.

என்ன வாய்ப்பு?

அஞ்சல் அலுவலகம் அதன் உரிமையை வழங்கும் வசதியைத் தொடங்கியுள்ளது. இது நல்ல வருமானத்திற்கு ஆதாரம். இதன் கீழ் இரண்டு வகையான உரிமைகள் உள்ளன. போஸ்ட் ஃபிரான்சைஸ் அவுட்லெட் மற்றும் தபால் முகவர்கள் இதில் அடங்கும். தபால் நிலையங்கள் இல்லாத பகுதிகளில், நீங்கள் ஒரு போஸ்ட் ஃபிரான்சைஸ் அவுட்லெட்டைத் தேர்வு செய்யலாம். அஞ்சல் முகவர்கள் உரிமையாளர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அஞ்சல் முத்திரை மற்றும் எழுதுபொருள் விநியோகத்தை கையாளுகின்றனர்.

குறைந்த முதலீட்டில் பெரிய லாபம்

போஸ்ட் ஆபீஸ் அவுட்லெட் உரிமையைப் பெற, உங்களிடம் சுமார் 200 சதுர அடி இடம் இருக்க வேண்டும். இதன் மூலம், 5,000 ரூபாய் செக்யூரிட்டி தொகையை டெபாசிட் செய்து வேலையைத் தொடங்கலாம். இதன் பின்னர், உங்கள் பகுதியில் தபால் நிலைய சேவைகளை வழங்கலாம். ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்கலாம். இது தவிர, தபால் முகவர் உரிமையாளராக மாறுவதற்கு, நீங்கள் இன்னும் கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் இதில் நீங்கள் எழுதுபொருள் மற்றும் முத்திரைகளை வாங்கி வழங்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கு தேவையான தகுதி

கல்வித் தகுதி குறித்து பேசுகையில், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் - உடனே விண்ணப்பியுங்கள்

மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News