பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டம்- சுப்பிரமணிய சாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 6, 2019, 07:43 AM IST
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டம்- சுப்பிரமணிய சாமி title=

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரித்து மாநிலங்களவையில் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது., ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலேயே பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் இந்த அரசின் அடுத்த திட்டமாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தை பிரதமரும், உள்துறை அமைச்சரும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இனி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிய சுப்பிரமணிய சாமி, தங்களிடம் வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் கூறுவதை தவிர, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மத்தியஸ்தம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 35A மற்றும் 370 சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவை விவாதத்திற்கு பின், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும், 10% இடஒதுக்கீடு மசோதாவும் இன்று நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து காஷ்மீர், சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த அதிகார போக்கிற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Trending News