மீண்டும் பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்த சானியா மிர்சா?

முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் குறித்து தற்போது வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2024, 02:21 PM IST
  • சானியா மிர்சாவிற்கு மீண்டும் திருமணம்.
  • மற்றொரு பாகிஸ்தான் நட்சத்திரத்தை மணந்தாரா?
  • இணையத்தில் தீயாய் பரவும் செய்தி.
மீண்டும் பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்த சானியா மிர்சா? title=

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஜனவரி 2024ல் சனா ஜாவேத் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஷோயப் மாலிக் சனா ஜாவேத்தை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், சனாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்த திருமணத்திற்கு முன்பு ஷோயப் மாலிக் அவரது முன்னாள் மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார். நடிகை சனா ஜாவேத் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்வதற்கு முன்பு, உமைர் ஜஸ்வால் என்ற பாடகரை மணந்தார். முதலில் ஒருவரையொருவர் விரும்பினாலும், அவர்களது திருமணம் நீடிக்கவில்லை, சிறிது நாட்களிலேயே விவாகரத்து பெற்றனர். சமீபத்தில், உமைர் ஜஸ்வால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் அவரின் புதிய மனைவி சானியா மிர்சா தான் என்றும் இணையத்தில் தகவல் பரவியது.

மேலும் படிக்க | ஹரியானாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது? காங்கிரஸ் தான் காரணமா?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Umair Jaswal (@umairjaswalofficial)

இருப்பினும், இந்த செய்தி உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. மணமகன் அணிவது போல் ஷெர்வானி உடையை அணிந்திருந்த ஒரு படத்தை உமைர் ஜஸ்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார், ஆனால் அவர் மணமகள் யார் என்பதைக் காட்டவில்லை. இன்ஸ்டா பதிவில் அரபு மொழியில் "உங்கள் கடவுள் உங்களுக்கு நல்லவற்றைத் தந்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்வார்" என்று தெரிவித்து இருந்தார் உமைர் ஜஸ்வால். சமூக ஊடகங்களில் பலரும் உமைர் ஜஸ்வாலின் இரண்டாவது மனைவி சானியா மிர்சா என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அது உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உமைர் தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்ததால் இந்தக் குழப்பம் தொடங்கியது. பலரும் மணமகளின் புகைப்படத்தை வெளியிடுமாறும் பதிவிட்டு வருகின்றனர்.

சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவேத் ஆகிய இருவரும் தங்கள் வாழ்க்கையின் புதிய பகுதிகளைத் தொடங்கி உள்ளனர். மறுபுறம் சானியா மிர்சா தனது உடல்நிலையில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் தனது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். "சானியா மிர்ஸா அவரது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் மக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைத்து இருப்பார். இருப்பினும், சோயப் மாலிக்குடன் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றதை தற்போது அனைவரிடம் இருந்தும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஷோயப்பின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவித்தார்" என்று சானியாவின் உறவினர்கள் முன்பு தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க | தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் எழுதிய பரபரப்பு கடிதம்... என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News