அதிர்ச்சி: 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்

வடக்கு டெல்லியின் சராய் ரோகிலா பகுதியில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Nov 23, 2016, 12:30 PM IST
அதிர்ச்சி:  3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் title=

புதுடெல்லி: வடக்கு டெல்லியின் சராய் ரோகிலா பகுதியில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் சராய் ரோகிலா பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த திங்கள் கிழமை வீட்டிற்கு வெளியே மாலை விளையாடிய சிறுமியை, பீகாரை சேர்ந்த பால்பீர் (35) என்பவன் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்பது சிறுமியின் சகோதரி தெரிவித்த தகவலால் தெரியவந்துள்ளது.

சுசந்தேகம் அடைந்த போலீசார், அருகாமையில் வசிக்கும் பால்பீர் வீட்டிற்கு சென்றனர். குடித்துவிட்டு தூங்கிய பால்பீர் தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று மறுத்தான். 

சுமார் 5 மணிநேர தொடர் விசாரணைக்கு பின்னர், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, சாக்கடையில் வீசிவிட்டதாக கூறினான். சம்பவ இடத்திற்கு அவனை போலீசார் அழைத்து சென்றனர், அவன் குழந்தையை அடித்து வீசிய சாக்கடையை அடையாளம் காட்டினான்.

சாக்கடைக்குள் இறங்கிய போலீசார் பிணத்தை வெளியே எடுக்க முயற்சித்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைக்கு உயிர் இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது அபாயகட்டத்தை கடந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இப்போது சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்பீரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Trending News