IPL 2018: புனேவுக்கு சிறப்பு ரயிலில் விரைந்த சென்னை CSK ரசிகர்கள்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் போட்டியைக் காண சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் சி.எஸ்.கே ரசிகர்கள் புனே புறப்பட்டனர்.

Last Updated : Apr 19, 2018, 11:04 AM IST
IPL 2018: புனேவுக்கு சிறப்பு ரயிலில் விரைந்த சென்னை CSK ரசிகர்கள்!! title=

IPL 2018 தொடரின் 11-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில், இரண்டு வருடம் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவதால், தமிழ்நாடு சி.எஸ்.கே-யின் மீது அதிக எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காண தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 

பின்னர், அந்தப் போட்டிகள் அனைத்தும் புனே மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 

இந்த போட்டியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். அவர்களுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்துள்ளனர்.

Trending News