ஏப்ரல் மாதத்தில் மட்டும் 30 மில்லியன் பேர் வேலை இழந்தனர். அதில் 86% ஆண்கள்..

CMIE தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 30 மில்லியன் ஆண்களும் பெண்களும் வேலை இழந்தனர். அதில் 86% ஆண்கள் ஆவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2020, 07:05 PM IST
  • ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் முடிவடைந்த வாரத்தில் 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக குறைந்துள்ளது
  • வேலை இழப்புகளில் 52 சதவீதம் 40 வயதிற்குட்பட்டவர்களில் அடங்கும்.
  • கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக விமான நிறுவனங்கள், உற்பத்தி, ஹோட்டல், உணவகங்கள், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் சேவைகள் போன்ற துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
  • வேலை இழப்பு மூலம், பெரும்பாலும் சேமித்து வைக்கப்பட்ட கூடுதல் பணத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 30 மில்லியன் பேர் வேலை இழந்தனர். அதில் 86% ஆண்கள்.. title=

புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக உலக பொருளாதாரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம் சரிவால் பல பேரை வேலையற்றவர்களாக ஆக்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ - CMIE) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஏப்ரல் மாதத்தில் 2.7 கோடி இளைஞர்கள் வேலை இழந்தனர் என சி.எம்.ஐ.இ யின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மே 10 ஆம் தேதியுடன் 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது சற்று ஆறுதல் அளித்தாலும், இன்னும் பாதிப்பு அதிக எண்ணிக்கையில் தான் இருக்கிறது. 

வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மூலம் கடனில் உள்ள குடும்பங்களின் விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று சிஎம்ஐஇ மேற்கோள் காட்டி உள்ளது. 

CMIE தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 30 மில்லியன் ஆண்களும் பெண்களும் வேலை இழந்தனர் மற்றும் வேலை இழப்புகளில் 86% ஆண்கள் உள்ளனர். அதிலும் வேலை இழப்புகள் இளைய வயதினரிடையே அதிகமாக உள்ளன.

மொத்தத்தில், 2019-20 ஆம் ஆண்டில் பணிபுரிந்தவர்களில் 44% பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள். இருப்பினும், வேலை இழப்புகளில் 52% 40 வயதிற்குட்பட்டவர்களில் அடங்கும். 

இதற்கு நேர்மாறாக, 2019-20 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டவர்களில் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 56% ஆக உள்ளனர். அவர்கள் வேலை இழப்பு என்பது 48% ஆக உள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் அதிக அளவில் பரவியதாலும், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவாலும் விமான நிறுவனங்கள், உற்பத்தி துறை, ஹோட்டல், உணவகங்கள், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் சேவைகள் போன்ற துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட தொடக்கத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், சேதத்தை மாற்றுவதற்கு இது போதாது.

இளம் மக்களிடையே ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள் காரணமாக அவர்களின் சேமிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊரடங்கு காலங்களில் குடும்பங்கள் பணத்தை நன்கு பாதுகாக்கக்கூடும் என்றாலும், வேலை இழப்பு மூலம், பெரும்பாலும் சேமித்து வைக்கப்பட்ட கூடுதல் பணத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த சேமிப்பு இழப்பு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்.

Trending News